பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் பாக்யாவை தற்போது கோபி சரமாரியாக திட்டிக் கொண்டிருக்கிறார். அவருக்கு சரியான பதிலடியை பாக்யா கொடுத்திருக்கிறார். வீட்டுக்குள் புகுந்து லைசென்ஸ் திருடியது கோபி தான் என்பதை பாக்கியா கண்டுபிடித்து தற்போது அவரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வார ப்ரோமோவில் கோபி பாக்கியாவை நடுரோட்டில் வழிமறித்து நான் ஆசை ஆசையாய் கட்டிய வீட்டை இப்படி அபகரித்துக் கொண்டாயே என்று சொல்லி சண்டை போடுகிறார். மேலும் தனது குடும்பத்தை தன்னிடம் இருந்து பிரித்து விட்ட நீ இன்னும் கூறிய விரைவில் கஷ்டப்படப் போகிறாய் என்று கூறிக் கொண்டிருக்கிறார். அதைக் கேட்ட பாக்யா தற்போது நம்பிக்கை துரோகம் செய்தவன், கூட இருந்தவளை ஏமாற்றியவன், வீட்டில் புகுந்து லைசென்ஸ் எடுத்தவனெல்லாம் சந்தோஷமாக இருக்கும் பொழுது நான் ஏன் கஷ்டப்படப் போகிறேன் என்று கேட்கிறார்.

மேலும் நான் மிகவும் நன்றாக இருப்பேன், சந்தோஷமாக இருப்பேன் என்று சொல்லி கோபியிடம் சவால் விட்டுவிட்டு போகிறார். அதைப் பார்த்த கோபி அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போய் நிற்கிறார். நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television