பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் தற்போது 95வது நாளுக்கான ப்ரோமோக்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. இன்னும் சில நாட்களே மீதம் இருக்கும் நிலையில் தற்போது பணப்பெட்டி டாஸ்க் வைக்கப்பட்டிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பணப்பெட்டி டாஸ்க் வைக்கப்பட்டு மூன்று நாட்கள் ஆகியும் இன்னும் யாரும் பெட்டியை எடுக்காமல் இருக்கின்றனர். ஒரு லட்சத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இதன் மதிப்பு தற்போது 12 லட்சமாக உயர்ந்திருக்கிறது. இதனால் பணப்பெட்டியை யார் எடுப்பார்கள்? என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. பலரும் விசித்ரா பணப்பெட்டியை எடுத்திருப்பதாக கருத்துக்களை கூறி வருகின்றனர். ஆனால் அந்தத் தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் பணப்பெட்டியின் மதிப்பை 12 லட்சமாக பிக்பாஸ் உயர்த்தி இருக்கிறார். பலரும் பணத்தை எடுக்கலாமா? வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் பூர்ணிமா மாயாவிடம் பணப்பெட்டியை எடுப்பது குறித்து யோசனை கேட்கிறார். அதற்கு மாயா நீங்கள் பணப்பெட்டியை எடுப்பதுதான் சரி என்று சொல்கிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிகிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television