சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தற்போது ஈஸ்வரி குணசேகரனிடமிருந்து சட்டபூர்வமாக விவாகரத்து பெற முடிவெடுத்து இருக்கிறார். மேலும் ஞானம் வீட்டில் உள்ள அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக புதுக்கடை ஒன்றை தொடங்கி இருப்பதாக கூறுகிறார். இதனால் அடுத்தடுத்து பரபரப்புகள் எழுந்திருக்கிறது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் இத்தனை நாட்களாக தர்ஷினிக்கும், சித்தார்த்துக்கும் திருமண ஏற்பாடுகளை ஆதி குணசேகரன் நடத்தி இருந்தார். இதனால் கதையில் சிறிது சுணக்கம் ஏற்பட்டிருந்தது. தற்போது மீண்டும் ‘எதிர்நீச்சல்’ டிராக்குக்கு திரும்பி இருக்கிறது என்று சொல்ல வேண்டும். இந்த நிலையில் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் ஹோட்டலில் அமர்ந்து ஈஸ்வரி மற்ற சகோதரிகளுடன் பேசிக் கொண்டிருக்கிறார்.

அப்போது ஆதி குணசேகரனை சட்டபூர்வமாக விவாகரத்து செய்வது குறித்து அவர் சிந்தித்துக் கொண்டிருப்பதாக கூறுகிறார். அதே சமயம் மற்றொருபுறம் ஞானம் தனியாக கடைய ஆரம்பித்து இருப்பதாக கூறி அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun Tv