விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ள நிலையில், தற்போது தொடரின் இரண்டாவது சீசன் ரசிகர்களுக்காக இயக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. முதல் சீசனை போலவே இந்த சீசனுக்கும் மக்கள் பேராதரவை கொடுத்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரின் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில், கோமதி , தனது மருமகள்கள் மீனா மற்றும் ராஜியிடம் பேசுவதை தவிர்க்கிறார்.இதனால் கடுப்பான ராஜி மற்றும் மீனா கோமதியிடம் நாங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லட்டுமா என கேட்கிறார். உடனே உள்ளே வந்த தங்கமயில், நீங்க மூன்று பேரும் பாசமாக இருப்பதை கண்டு நான் பொறாமை பட்டுருக்கேன்.

நீங்க பேசுங்க என கோமதியிடம் கூறவே, அதை கேட்ட கோமதி மருமகள்களிடம் பேச சம்மதிக்கிறார். தங்கமயில் செய்த இந்த உதவிக்கு இரண்டு மருமகள்களும் தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர்.
Embed Video Credits : VIJAY TELEVISION