சன்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிரபல சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலுக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. முன்னணி தொடர்களில் ஒன்றாக உருவெடுத்த இந்த தொடர் ரசிகர்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகி வந்தது. இந்த தொடரில் நடித்த நடிகர்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகி உள்ளது. வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் திடீரென முடிவுக்கு வந்தது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த தொடரில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் மதுமிதா. தனது எதார்த்த நடிப்பால் தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி உள்ளார் இவர். இந்த தொடருக்கு பிறகு அடுத்த தொடருக்காக மதுமிதா காத்துகொண்டு இருக்கிறார்.தெலுங்கு சினிமாவை சேர்ந்த இவர், தற்போது தமிழில் முன்னணி சின்னத்திரை நடிகையாக உருவெடுத்து உள்ளார்.

தற்போது மாலத்தீவில் விடுமுறையை கொண்டாடி வரும் இவர் அங்கு எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.
