தமிழ் சினிமா ரசிகர்களால் தலையில் வைத்து கொண்டாடப்படும் நடிகர் விஜய். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் உள்ளது. தனது நடிப்பினால் பெரிய ரசிகர்கள் கூட்டத்தையே கொண்டு இருக்கிறார் விஜய். தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து பாக்ஸ் ஆபிஸில் உச்சத்தில் இருக்கும் இவர் தற்போது அரசியலில் இறங்கி உள்ளார்.

இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்த கோட் படம் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. வசூலிலும் சக்கை போடு போட்டு வருகிறது. நான்கு நாட்கள் முடிவிலேயே இப்படம் சுமார் 288 கோடி வசூலை பெற்று சாதனை படைத்து இருக்கிறது. தொடர்ந்து அரங்கம் நிறைந்த காட்சிகளாக படம் ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் விஜய் அரசியலில் களம் இறங்க உள்ளதால், கடைசியாக ஒப்பந்தமாகி இருக்கும் ஒரு படத்தை முடித்துவிட்டு வெளியேற உள்ளார். இப்படத்தினை இயக்குனர் ஹெச் வினோத் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் அப்டேட் இன்று மாலை வெளியாகும் என படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்து உள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
5 mani-ku sandhippom nanba nanbi 🤝🏻
We are happy to announce that our first Tamil film is …………#KVN5update Today at 5 PM 🔥 pic.twitter.com/XU3UIO9TId— KVN Productions (@KvnProductions) September 13, 2024