தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்றவர் நடிகர் சுந்தர் சி. பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்துஇருக்கிறார் . இவர் இயக்கத்தில் வெளியாகிய பல படங்கள் இன்றும் அனைவர்க்கும் மிகவும் விருப்பமான படங்களில் ஒன்றாக தான் உள்ளது. அந்த வரிசையில் இவர் இயக்கிய அரண்மனை படம் மாபெரும் வெற்றிபெற்றது. இப்படத்திற்கு மக்கள் கொடுத்த பேராதரவினை கண்ட சுந்தர் சி தொடர்ந்து பல பாகங்களை இயக்கி வருகிறார்.
அப்படி சுந்தர் சி அண்மையில் இயக்கி நடித்த அரண்மனை 4 படம் மக்களிடம் வரவேற்பினை பெற்று உள்ளது. இப்படத்தை தொடர்ந்து அவர் அரண்மனை 5 படத்தை இயக்க இருப்பதாக போஸ்டர்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இதனை கண்ட நடிகை குஷ்பு, இது தவறான செய்தி என ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்து உள்ளார். மேலும் அரண்மனை 5 படம் இப்பொது உருவாகவில்லை எனவும்,
படம் குறித்த அப்டேட்டுகள் வெளியானால் அதனை இயக்குனர் அல்லது தயாரிப்பாளர்கள் தான் வெளியிடுவார்கள், இது போலியான போஸ்டர் என கூறி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்து உள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகிவருகிறது .
View this post on Instagram

