தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த சமந்தா தற்போது தெலுங்கு சினிமாவையும் கலக்கி வருகிறார். இவர் தெலுங்கு நடிக நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு இருந்தார். விண்ணை தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இருவரும் இணைந்து நடித்ததில் இவர்களுக்கு இடையே காதல் உருவாகி இருந்தது. 2017ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் ஆகிய நிலையில் , திருமணம் ஆகி நான்கு ஆண்டுகளில் இருவரும் பிரிந்தனர்.

தற்போது தனியாக வாழ்ந்து வரும் சமந்தா அடுத்தடுத்து படங்களில் நடித்து பிசியாக உள்ளார்.சமந்தா நடித்துள்ள சிட்டாடல் படத்தின் வெப் தொடர் வெளியாக உள்ள நிலையில், ரசிகர்களுடன் சமந்தா கலந்துரையாடினார். அப்போது, ரசிகர் ஒருவர் உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என சமந்தா பார்த்து கூறியுள்ளார். இதனால் கடுப்பாகிய சமந்தா, தனக்கு மயோசிட்டிஸ் பாதிப்பு இருப்பதாகவும்,

அதனால் உடல் எடை கூடி குறைவதாகவும் கூறியுள்ளார். மேலும் மற்றவர்களின் குறைகளை கண்டுபிடிப்பதை நிறுத்திவிட்டு , நாம் 2024ல் வாழ்கிறோம் என அதனால் வாழுங்கள் வாழவிடுங்கள் என கூறி உள்ளார்.