நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 2.59 சதவிகிதாமாக உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் பொருளாதாரம் மந்த நிலையை சந்தித்து வருகிறது. வேலைவாய்ப்புயின்மை, நுகர்வு தன்மை குறைந்து போனது, வருவாய் ஈட்ட எந்த அரசிடம் திட்டம் இல்லாமை, முதலீடு குறைவு போன்ற காரணத்தினால் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவிகிதத்திற்கும் கீழே செல்லும் என முடிவுகள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் வெளியான புள்ளிவிவரத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் அதிகரித்து இருந்தது. அதேபோல் தற்போது மொத்த விலை பணவீக்கமும் அதிகரித்து இருக்கிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மொத்த விலை பொது பணவீக்கம் 2.59 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. உணவு பொருட்களில் ஏற்பட்ட விலை உயர்வு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன்பு கடந்த ஏப்ரல் மாதம் இதன் அளவு 3.24 சதவிகிதமாக காணப்பட்டது.