விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஆஹா கல்யாணம்’ தொடரில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மாமியார் கோடீஸ்வரியை தற்போது சூர்யா கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார். எனவே கோடீஸ்வரிக்காக இனி அவர் மகாவுடன் இணைந்து வாழ்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

‘ஆஹா கல்யாணம்’ தொடரில் மகாவின் தயாராக இருக்கும் கோடீஸ்வரி தனது மூத்த மகள் ஐஸ்வர்யா கர்ப்பமாக இருப்பதால் அவரைப் பார்த்துக் கொள்வதற்காக அவரது வீட்டிலேயே தங்கி விடுகிறார். அப்போது ஐஸ்வர்யாவின் மாமியார் சித்ரா மஹா மற்றும் ஐஸ்வர்யாவை நிம்மதியாக வாழ விட மாட்டேன் என்று சபதம் போட்டுக்கொண்டிருக்கிறார். இதை கோடீஸ்வரி கவனித்து விடுகிறார்.
எனவே சித்ராவுக்கு பாடம் கற்பிக்க அவர் முகத்துக்கு பயன்படுத்தும் கிரீமில் ப்ளீச்சிங் பவுடரை கலந்து விடுகிறார். இதனால் எரிச்சல் தாங்காமல் சித்ரா கத்துகிறார். பின்னர் அவர் முகத்தில் மஞ்சளை பூசி விடுகிறார் கோடீஸ்வரி. அதை பார்க்கும் கெளதம் பயத்தில் அலறுகிறார். அந்த காமெடியான ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television