மலையாள நடிகை பூர்ணா தனது மகனின் முதல் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். மகன் பிறந்தது முதல் தற்போது வரையிலான அழகிய புகைப்படங்களை வீடியோவாக அவர் பகிர்ந்திருக்கிறார்.


கடந்த 2008ம் ஆண்டு ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார் பூர்ணா.


அதன் பின்னர் ‘கொடைக்கானல்’ ‘கந்தக்கோட்டை’, ‘அர்ஜுனன் காதலி’, ‘ஆடு புலி’, ‘வேலூர் மாவட்டம்’, ‘வித்தகன்’, ‘ஜன்னல் ஓரம்’, ‘தகராறு’, ‘சகலகலா வல்லவன்’, ‘மணல் கயிறு 2’, ‘கொடிவீரன்’, ‘சவரக்கத்தி’, ‘அடங்க மறு’, ‘காப்பான்’, ‘லாக்கப்’ போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.


கடைசியாக தமிழில் இவர் நடித்த படம் ‘டெவில்’. இவர் தெலுங்கில் ‘குண்டூர் காரம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.


இவருக்கு துபாயை சேர்ந்த பிரபல தொழிலதிபரான ஆசிஃப் கடந்த 2022ம் ஆண்டு திருமணம் நடந்தது.


கடந்த ஆண்டு இந்த தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது.


திருமணத்திற்கு பின்னர் உடல் எடை ஏறிய போதும் பூர்ணா தொடர்ந்து நடித்து வருகிறார். தனது மகனுடன் அவ்வப்போது போட்டோஷூட் எடுப்பதை வீடியோ பதிவிடுவது என்று தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.


இந்த நிலையில் பூர்ணாவின் மகனுக்கு இன்று ஒரு வயது நிறைவடைந்திருக்கிறது. அதை முன்னிட்டு அவர் மகன் பிறந்தது முதல் தற்போது வரை உள்ள புகைப்படங்களை வீடியோ தொகுப்பாக பகிர்ந்து இருக்கிறார்.


தன்னுடைய மகன் தனது வாழ்க்கையை முழுமையாக்கி இருப்பதாக நடிகை பூர்ணா உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார். பலரும் பூர்ணாவின் குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
View this post on Instagram