தமிழ் சினிமாவில் சிறிய கதாபாத்திரத்தில் பாய்ஸ் படத்தில் நடித்து அறிமுகமாகியவர் நடிகர் நகுல். இப்படத்திற்கு சினிமா பக்கம் வராத இவர் , பிறகு கதாநாயகனாக நடித்த காதலில் விழுந்தேன் படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது. இப்படத்தின் மூலம் முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் உருவெடுத்தார் . தொடர்ந்து இவர் நடித்த மாசிலாமணி படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. வரிசையாக வெற்றிப்படங்களை கொடுத்த நகுலுக்கு தற்போது சினிமாவில் சறுக்கல்கள் ஏற்பட்டு உள்ளது.

2015ஆம் ஆண்டு வெளியான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்திற்கு பிறகு தொடர்ந்து, நாரதன், பிரம்மா என தோல்வி படங்களை கொடுத்ததால் சினிமாவில் நல்ல கதைக்காக நகுல் காத்திருந்தார். அப்படி அமைந்தது தான் வாஸ்கோடா காமா திரைப்படம். இப்படமும் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தனது அடுத்தப்பட வேளைகளில் இறங்கி உள்ளார்.
இந்நிலையில் நடிகர் நகுல் தனது குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாட வெளிநாடு சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் நகுல். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.