மலையாள சினிமாவில் நடிகையாக வலம் வந்த அபர்ணா தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள் படத்தில் நடித்து அறிமுகம் ஆகினார் . இப்படத்தை தொடர்ந்து இவர் நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான சர்வம் தாளமயம் படத்தில் நடித்து அசத்தியிருந்தார். இருப்பினும் இவருக்கான அங்கீகாரம் தமிழ் மற்றும் மலையாளத்தில் கிடைக்கவில்லை, பின்னர் சூர்யாவுக்கு ஜோடியாக சூரரைப்போற்று படத்தில் நடித்து பட்டையை கிளப்பி இருந்தார்.

இப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையை சினிமாவில் ஏற்படுத்தி கொடுத்தது. இப்படத்தை தொடர்ந்து முன்னணி நடிகையாக சினிமாவில் வலம் வரத்தொடங்கினார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான ராயன் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது . தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிகை அபர்ணா நடித்து வருகிறார்.
தற்போது இன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஓணம் சேலையில் புகைப்படம் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அபர்ணா புகைப்படங்களை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.