மிருகம் படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர் நடிகர் ஆதி. இப்படத்திற்கு பிறகு இவர் நடித்த ஈரம் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பினை பெற்று கொடுத்தது. முதல் படமான மிருகம் படம் இவருக்கு வெற்றிபெறாவிட்டாலும், இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. அந்த அளவுக்கு நடிப்பில் மிரட்டி எடுத்து இருந்தார் நடிகர் ஆதி. ஈரம் படத்திற்கு பிறகு முன்னணி நட்சத்திரமாக உருவெடுத்து உள்ளார்.

இப்படத்திற்கு பிறகு தொடர்ந்து நல்ல கதைகளை கேட்டு நடித்து வருகிறார். 2017ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான மரகத நாணயம் படம் மாபெரும் ஹிட் அடித்தது. இப்படத்திற்கு பிறகு ஆதி முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை பெற்றார். கதாநாயகனாக மட்டும் இல்லாமல் வில்லனாகவும் வாரியார் படத்தில் நடித்து மிரட்டி இருந்தார். மரகத நாணயம் படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த நடிகை நிக்கி கல்ராணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு அடுத்ததாக சப்தம் படம் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. தற்போது இவர் தனது தந்தையின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு திருக்கடையூர் கோவிலில் மனைவி நிக்கி மற்றும் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்து உள்ளார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.