சின்னத்திரை உலகில் வில்லியாக நடித்து புகழ்பெற்றவர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் குறிப்பிடத்தக்கவர் தான் ஸ்ரீதேவி அசோக். இவர் ராஜா ராணி, பூவே உனக்காக போன்ற பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கிறார். வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பலரின் உள்ளம் கவர்ந்த நடிகையாக இவர் இருக்கிறார். இவர் தற்போது சமீபத்தில் வெளியாகி பல மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ள ரஞ்சிதமே பாடலுக்கு சேலையில் மரண குத்தாட்டம் போட்டிருக்கிறார். புதுக்கோட்டையிலிருந்து சரவணன் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கி தனது வாழ்க்கையை தொடங்கியவர் ஸ்ரீதேவி. பின்னர் கஸ்தூரி, இளவரசி, வாணி ராணி, தங்கம் போன்ற பல தொடர்களில் நடித்து பிரபலமானார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

நடிப்பது மட்டுமில்லாமல் நடனத்தின் மீதும் இவருக்கு ஆர்வம் இருந்ததால் மானாட மயிலாட நிகழ்ச்சியிலும் ஒரு போட்டியாளர்களாக கலந்து கொண்டு இருந்தார். துணை வேடங்களிலும், வில்லி கதாபாத்திரத்திலும் நடிப்பில் அசத்தும் இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தாலாட்டு சீரியலில் மயூரி கதாபாத்திரத்திலும், விஜய் டிவியில் காற்றுக்கென்ன வேலி நாடகத்தில் சியாமளாதேவி கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் மிக ஆக்டிவாக இருக்கும் அவர் எப்போதும் ஏதாவது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்ட வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த வீடியோக்கள் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை தாண்டுவது வழக்கமாக இருக்கிறது.
குறிப்பாக தனது மகளுடன் இருக்கும் புகைப்படங்களையும் அந்த குழந்தையின் கியூட் வீடியோக்களையும் பகிர்வதை வழக்கமாகக் ககொண்டிருக்கிறார். தற்போது இவர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ரஞ்சிதமே பாடலுக்கு மரண குத்தாட்டம் போட்டுள்ள வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பகிர்ந்த ரசிகர்கள் ஸ்ரீதேவி அசோக்கின் நடனத்தைப் பாராட்டி கமெண்ட்களை போட்டு வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..! Watch the Below Video..!
Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7