படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ஐஸ்வர்யா ராய், மணிரத்தினத்தை கட்டிப்பிடித்து தனது நன்றியை வெளிப்படுத்தினார். அப்பொழுது எப்போதும் இல்லாத அளவிற்கு மணிரத்னம் வெட்கப்பட்டு சிரித்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொன்னின் செல்வன் திரைப்படம் கடந்த 30ஆம் தேதி வெளியானது. வெளியான 3 நாட்களில் 200 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்றுள்ளது. இது எந்த தமிழ் படமும் செய்யாத சாதனையாகும். விக்ரம், வலிமை ஆகிய படங்களைக் கூட பின்னுக்குத் தள்ளி பொன்னியின் செல்வன் சாதனை படைத்துள்ளது. இதனால் பொன்னியின் செல்வன் பட குழு ஏகத்துக்கும் குஷியில் இருக்கிறார்கள். பலரும் முயன்று எடுக்க முடியாத இந்த படத்தை, குறுகிய காலத்தில் எடுத்து சாதனை படைத்திருக்கிறார் மணிரத்தினம்.

தமிழ் உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் மணிரத்தினம். இவர் இயக்கிய படங்கள் அனைத்துமே பெரிய அளவில் பெற்றுக் கொடுத்துள்ளது. 1985 ஆம் ஆண்டு முதல் இவர் தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். தன்னுடைய 40 ஆண்டுகால வாழ்க்கையில் கனவு திட்டமாக இருந்தது இந்த பொன்னியின் செல்வன் என்று அவர் பல பேட்டிகளில் கூறியிருந்தார். அவரின் கனவு தற்போது நிறைவேறி இருக்கிறது. படம் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. மேலும் மணிரத்தினிற்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று தனது மகளுடன் படம் பார்க்க வந்த ஐஸ்வர்யா ராயை மக்கள் சூழ்ந்து கொண்டு ஆரவாரம் எழுப்பினர். அதனால் அவர் மகிழ்ச்சியில் இருந்தார். தனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த மணி ரத்னமிற்கு தன்னுடையை நன்றிகளை தெரிவித்தார்.

மேலும் மணிரத்னத்தை சென்று கட்டி அணைத்து கலங்கினார் ஐஸ்வர்யா ராய். அவரது மகளும் மணிரத்னத்தை கட்டிப்பிடித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது மணிரத்தினம் வெட்கப்பட்டு சிரித்தார். அந்த வீடியோவை பார்த்த பலரும் தலைவருக்கு வெட்கம் எல்லாம் வருகிறது என்று கலாய்த்து கமெண்ட் போட்டு வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..