Categories: சினிமா

பள்ளி Sports Day-வில் கோப்பைகளை வாங்கி குவிக்கும் தனுஷ் மகன்கள்.! ஐஸ்வர்யா பதிவிட்ட புகைப்படங்கள்.!

வெளியிட்டது

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா ஆகியோரின் பள்ளி ஸ்போர்ட்ஸ் டே விழாவில் பங்கு பெற்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும், தனுஷும் 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

பள்ளி Sports Day-வில் கோப்பைகளை வாங்கி குவிக்கும் தனுஷ் மகன்கள்.! ஐஸ்வர்யா பதிவிட்ட புகைப்படங்கள்.! 1

18 ஆண்டுகளாக சமூகமான வாழ்க்கையை வாழ்ந்து வந்த அவர்களுக்கு லிங்கா மற்றும் யாத்ரா என்கிற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த வருடம் 18 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தனர். இது தனுஷ் மற்றும் ரஜினி ரசிகர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இருவரும் சட்ட ரீதியாக விவாகரத்து வாங்கவில்லை என்ற போதிலும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.


ஓர் ஆண்டுகளைக் கடந்தும் இருவரும் இணைந்து வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த நிகழ்வு இன்றும் கைகூடாமலே இருந்து வருகிறது. இருவருக்கிடையில் நடந்த சமரச பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்ததாக தெரிகிறது. யாத்ரா மற்றும் லிங்கா ஆகிய இருவரின் பள்ளி விளையாட்டு விழா, ஸ்போர்ட்ஸ் டே போன்ற பலவற்றில் ஐஸ்வர்யா மட்டுமே கலந்து கொள்கிறார். ஆனால் தனுஷ் தன்னுடைய பட வெளியீட்டு விழா, பாடல் வெளியீட்டு விழா போன்ற அனைத்துக்கும் தனது மகன்களை மறக்காமல் அழைத்துச் சென்று விடுகிறார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு யாத்ரா பள்ளி ஸ்போர்ட்ஸ் டேவில் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வில் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர் .பிரிவை அறிவித்த பின்பு இருவரும் மகனோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. மீண்டும் இருவரும் இணைந்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மறுபடியும் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஐஸ்வர்யா தனது தந்தை ரஜினிகாந்துடன் வாழ்ந்து வருகிறார்.


தனுஷ் தற்போது போயஸ் கார்டின் பகுதியில் தனது மாமனாரின் வீட்டிற்கு அருகிலேயே பிரம்மாண்டமாக வீடு ஒன்றை வாங்கி கட்டி இருக்கிறார். அந்த வீடியோக்களும் புகைப்படங்களும் சமீபத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த நிலையில் தனுஷ் மகன்கள் ஸ்போர்ட்ஸ் டே நிகழ்ச்சி நேற்று நடைபெற்று இருக்கிறது. அதில் தொடர் ஓட்டப்பந்தயத்தில் தனுஷின் மூத்த மகன் யாத்ரா முதலிடம் பிடித்து கோப்பையை வென்றிருக்கிறார். அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஐஸ்வர்யா பகிர்ந்திருக்கிறார்.

அந்த பதிவில் சூரியன் எவ்வளவு சுட்டெரித்தாலும் இந்த குழந்தைகளின் விளையாட்டு ஆர்வத்தை தடுத்து நிறுத்த முடியாது. காலையில் சூரிய ஒளியில் ஓடி அவர்கள் ஒளிர்கிறார்கள். அங்கிருந்து என் மகன்களை பார்த்து பிரகாசிக்கிறேன் என்ற வசனங்களை பகிர்ந்து புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்