டெல்லி இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உலக நாடுகளிடையே பலத்த அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை சுட்டிக்காட்டி, உலகின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களான ஹார்வர்ட், ஏல், கொலம்பியா, நியூ யார்க், ஸ்டாண்ட்போர்ட், எம்.ஐ.டி போன்ற பல நிறுவனத்தை சார்ந்த முன்னாள் மாணவர்கள் கூட்டறிக்கையினை வெளியிட்டுள்ளனர்.

அதில், ஜனநாயக அமைப்பை பெற்ற சமூகத்தில் ஒரு காவல்துறையின் நடத்தைகளை வழிநடத்தும் அனைத்து விதிமுறைகளும் மீறப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு மற்றும் சர்வதேச மனித உரிமை சட்டம் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள மனித உரிமைகள் மீது வன்முறை தாக்குதல் நடைபெற்றுள்ளன. மாணவர்களுக்கு எதிராக மிருகத்தனமான தாக்குதலை ஏவிய காவல்துறை மீது விசாரணை தேவை என வலியுறுத்தியுள்ளது.
மேலும், ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் மற்றும் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் மாணவ போராட்டக்காரர்களுக்கு எதிராக காவல்துறை மற்றும் துணை இராணுவதினர் சட்டவிரோதமான வன்முறையை பின்பற்றியுள்ளனர் என கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் அவர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.