Categories: சினிமா

“DnA-ல D இல்லனா இப்போ இங்க A இல்ல”!!”மேடையில் உருக்கமாக பேசிய அனிருத்”!!

வெளியிட்டது

தமிழ் திரை ரசிகர்களின் மிகவும் பிடித்தமான காம்போ என்று லிஸ்ட் எடுத்தால் அதில் தனுஷ் மற்றும் அனிருத்தின் DNA காம்போ நிச்சயம் இடம் பெரும். அறிமுகபடுத்திய முதல் அனிருத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்காற்றியவர் நடிகர் தனுஷ். பலருக்கும் மிக பெரிய ஹிட்க்களை அனிருத் கொடுத்து இருந்தாலும் இவர்களின் காம்போ எப்போதும் சிறப்பான ஒன்று தான்.

"DnA-ல D இல்லனா இப்போ இங்க A இல்ல"!!"மேடையில் உருக்கமாக பேசிய அனிருத்"!! 1

நடிகர் தனுஷ் இன்று இந்திய முழுவதும் அறியப்படும் நடிகராக இருக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் நடித்து வரும் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் OTT-இல் வெளியான  ஹாலிவுட்டின் “தி கிரே மேன்” படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்பொது இவர் நடிப்பில் மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் “திருச்சிற்றம்பலம்” செல்வராகவன் இயக்கத்தில் “நானே வருவேன்”,  தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூறி இயக்கத்தில் “வாத்தி” போன்ற படங்கள் தயாராகி வருகின்றன.

அண்மையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் “கேப்டன் மில்லர்” என்ற படமும் அறிவிவிக்கப்பட்டுள்ளது. படு பிஸியாக நடித்து வரும் தனுஷ் தான் நடிக்கும் படங்களில் பாடல்கள் எழுதியும், சில பாடல்கள் பாடியும் வருகிறார். அந்த வகையில் இப்பொது நடிகர் தனுஷ், ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா என பலர் நடித்துள்ள “திருச்சிற்றம்பலம்” படம் வருகிற ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த படத்தில் 5 வருடங்கள் இடைவேளைக்கு பிறகு தனுஷ் மற்றும் அனிருத் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளன. இருவருமே இசைத்துறையில் மிக பெரிய ஹிட் பாடல்கள் கொடுத்துள்ளனர். இதனாலேயே இந்த படத்தின் மீது மிகவும் எதிர்பார்ப்புகள் உள்ளது. முதல் பாடல் “தாய் கிழவி” பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அண்மையில் படத்திலிருந்து இரண்டாவது பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. life of pazham என்ற பெயரில் மூன்றாவது பாடலும் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இந்த படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடந்துள்ளது. நடித்தார்கள் தனுஷ், ப்ரகாஷ் ராஜ், பாரதி ராஜா, ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவனி ஷங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் இசையமைப்பாளர் அனிருத்தின் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் பேசிய பொது, “2010-ஆ,ம் ஆண்டு நான் சோகாமாக இருந்த பொது தனுஷ் ஒரு நாள் என்னிடம் ‘நீ வேணா பாருடா, இன்னும் 10 வருஷத்துல நீ எந்த இடத்துல இருக்கேனு சொன்னாரு’. அது இப்போ நடந்துருச்சு. உள்ள வரும் போதே எதோ படத்தோட FDFD வந்த மாறி இருக்கு. DnA-னு சொல்றாங்க எல்லாரும் எங்கள உண்மையாவே  D இல்லேனா இந்த A இல்ல” என உருக்கமாக பேசிய அனிருத்.

 

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்