தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் ‘அலைபாயுதே’ படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் மாதவன். பிறகு மின்னலே, டும்டும்டும், அன்பே சிவம், நளதமயந்தி, பிரியமான தோழி, இறுதிச் சுற்று, விக்ரம் வேதா போன்ற வெற்றிப் படங்களில் நடித்தார். தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து அசத்தியிருக்கிறார் மாதவன். இவருக்கு பெண் ரசிகைகள் மிக அதிகம். பெண்கள் மத்தியில் ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்தார் மாதவன்.சிறிய இடைவெளிக்குப் பின் அவர் இயக்கி நடித்துள்ள ஒரு படம் தான் ராக்டெரி நம்பி விளைவு. இந்த படம் இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணிபுரிந்த நம்பி நாராயணன் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. தற்போது நடிப்பது மட்டுமில்லாமல் இயக்குனர் அவதாரமும் எடுத்துள்ளார் மாதவன். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணிபுரிந்தவர் நம்பி நாராயணன். இவர் இஸ்ரோவின் மிக நம்பகமான தகவல்களை பாகிஸ்தானுக்கு விற்றதாக தேசதுரோக குற்றம் சாட்டி அவரை பணியில் இருந்து நீக்கினார்கள். பின்னர் தனி ஆளாக வழக்கு தொடுத்து போராடி தன்னை குற்றமற்றவர் என நிரூபித்தார் நம்பி நாராயணன். அவர் பட்ட இன்னல்களையும், கடந்து வந்த பாதையும் படமாக்க விரும்பினார் மாதவன். இதை தானே இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் சூர்யா மற்றும் சிம்ரன் ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த வாரம் வெளியான இந்த படம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் மாதவனை வெகுவாக பாராட்டினார். இந்த கால இளைஞர்கள் கண்டிப்பாக இந்த படத்தை பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் படத்தைப் பார்த்த ஏ.ஆர்.ரகுமான் மாதவனை வெகுவாக பாராட்டினார். அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ரகுமான் பாராட்டியது என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம் என்று பதிவிட்டுள்ளார். படம் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளதால் மாதவன் குஷியாக இருக்கிறார். தொடர்ந்து அவருக்கு கிடைக்கும் வரவேற்பால் இது போல நல்ல கதையம்சம் கொண்ட படங்களை அவர் எடுக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below Video..
Youtube Video Code Embed Credits: News Now