Categories: சினிமா

படம் ரொம்ப நல்லா இருக்கு.. அருள் நிதியின் டைரி படம் குறித்து மக்கள் கூறிய விமர்சனம்

வெளியிட்டது

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் கைதேர்ந்தவராக இருக்கிறார் நடிகர் அருள்மதி இவர் சாதாரண படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு திரில்லர் படங்களில் நடிப்பதையே கவனத்தில் கொண்டுள்ளார் பேய் படங்கள் என்றாலே தற்போது எப்படி ராகவா லாரன்ஸ் என்று ஆகிவிட்டதோ அதுபோலத்தான் திரில்லர் என்றாலே அருள்நிதி என்று ஆகிவிட்டது இவர் நடித்துள்ள அடுத்த திரில்லர் படமான டைரி படம் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பலரும் படம் மிக நன்றாக இருப்பதாகவும் பல சிற்பங்கள் இருப்பதால் நம்மால் கண்டுபிடிக்கவே முடியவில்லை ஆனால் கடைசியில் அனைத்தையும் ஒன்றாக காண்பித்து நமக்கு பெஸ்ட் அனைத்தையும் உடைத்து விடுவார்கள் என்று கூறியிருக்கின்றனர். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

படம் ரொம்ப நல்லா இருக்கு.. அருள் நிதியின் டைரி படம் குறித்து மக்கள் கூறிய விமர்சனம் 1

அருள்நிதி நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தை பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் எஸ் கதிரேசன் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தை கோப்ரா படத்தில் கதாசிரியராக வேலை பார்த்து வந்த புது முக இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் இன்னாசி பாண்டியன் இயக்கியிருக்கிறார். இதன் திரையரங்க வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன் மூவிஸ் வாங்கி இருக்கிறது. படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன்பு சென்னையில் வெளியிடப்பட்டது. இதில் உலகநாயகன் கமலஹாசன், நடிகர் விக்ரம் மற்றும் ஹிந்தி நடிகர் அமீர்கான் ஆகியோர் முன்னிலையில் இந்த ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது திரில்லர் மற்றும் கிரைம் ஜேனரில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இன்று தமிழகம் முழுவதிலும் இந்த படம் வெளியாகி இருக்கிறது.

தற்போது இந்த படத்தின் முதல் காட்சிகள் முடிந்து வெளியே வந்த பலரும் படம் மிக நன்றாக இருப்பதாக கூறினர். அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்க்கவோ, யூகிக்கவோ முடியவில்லை என்று கூறினர். மேலும் த்ரில்லர் படமாக இருந்த போதிலும் அம்மா செண்டிமெண்ட் வைத்து சில இடங்களில் நம்மை அழவைத்து விட்டதாகவும் மக்கள் கருத்து கூறினர். நீங்களும் அந்த வீடியோவை காண..Watch the below video…

YouTube Video Code Embed Credits: Chennai Day

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்