கோபியை தேடி திருமண மண்டபத்திற்கு வந்த ராமமூர்த்தியை கோபி கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. கோபி ராதிகாவின் திருமணத்தை தான் எப்படியாவது நிறுத்தி விடுவேன் என்று சபதம் எடுத்திருக்கிறார் கோபியின் தகப்பனார் ராமமூர்த்தி. இதனால் அவர் கோபியின் திருமணம் நடைபெறும் மண்டபத்தை தேடி அலைந்து கொண்டிருக்கிறார். ஆனால் அங்கு தான் பாக்யாவும் திருமண ஆர்டருக்காக சமைத்துக் கொண்டிருக்கிறார். இது கோபிக்கும் தெரியாது, பாக்யாவும் தான் கணவரின் இரண்டாவது திருமணத்தில் சமைத்துக் கொண்டிருப்பது அவருக்கும் தெரியாது. இந்த இரண்டு விஷயமும் கோபியும் தந்தை ராமமூர்த்திக்கும் தெரியாது. அதனால் அவர் கோபிக்கு திருமணம் நடைபெறும் இடத்தை தேடி அலைந்து கொண்டிருக்கிறார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

ஒரு வழியாக கோபியின் திருமணம் நடக்கும் மண்டபத்தை கண்டுபிடித்து ராமமூர்த்தி வந்து விடுகிறார். அங்கு அவர் கோபியின் கழுத்தை பிடித்து இந்த வயதில் கல்யாண கோலத்தில் நிற்கிறாயே உனக்கு வெட்கமாக இல்லையா என்று கேட்கிறார். இதனால் கோபமான கோபி அவரது தந்தையின் கழுத்தை பிடித்து வெளியே போயா என்று மரியாதை குறைவாக தள்ளி விடுகிறார். இதனால் மிகவும் அவமானமாக உணருகிறார் ராமமூர்த்தி. மேலும் பாக்யாவும் சண்டை நடக்கும் அந்த இடத்திற்கு வந்து விடுகிறார். கோபியை பார்த்து இனிமேல் எதுவும் பேச வேண்டாம் என்று கோபத்துடன் கூறுகிறார் பாக்கியா.
மேலும் பாக்கியா தனக்கு இந்த ஒரு வாய்ப்பு தான் இருக்கிறது என்று சமையல் வேலை குறித்து கண்கலங்கி பேசுகிறார். பின்னர் தன் நிலை குறித்து மாமனாரிடம் கதறி அழுகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண.. Watch the below video..
YouTube Video Code Embed Credits: Vijay Television