பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் குடும்ப சூழ்நிலை காரணமாக தற்போது பாக்யா தனது ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸை கைவிடுவதாக அறிவித்திருக்கிறார். இதனால் அவரது பல சுமைகளில் ஒரு சுமை குறைந்து இருப்பதாகவே தெரிகிறது. விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியலான பாக்கியலட்சுமி கதை தற்போது விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஈஸ்வரி மசாலா, ஈஸ்வரி கேட்டரிங் சர்வீசஸ், ஐடி கம்பெனி கேண்டீன் காண்ட்ராகட், திருமணம் ஆர்டர்கள் என்று பல தொழில்களை செய்து வருகிறார் பாக்யா. அதனுடன் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பிலும், கல்லூரியிலும் இணைந்திருக்கிறார். இது மிகவும் கேலிக்குள்ளானது. ஒரு பெண்ணால் எவ்வளவு தான் சமாளிக்க முடியும் என்று பலரும் பாக்கியாவை கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் தற்போது இங்கிலீஷ் வகுப்பை கைவிட போவதாக பாக்யா அறிவித்திருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் அவர் இங்கிலீஷ் வகுப்பையும் காலேஜையும் வீட்டையும் கவனிக்க முடியவில்லை என்று கூறுகிறார்.

அப்போது மாமனார் நீ விரும்பி சேர்ந்த வகுப்பாயிற்றே? என்று கேட்க, இனி இங்கிலீஷ் வகுப்பிற்கு செல்ல போவதில்லை என்று முடிவெடுத்து அதை பழனிச்சாமியிடம் சென்று கூறுகிறார். பழனிசாமி இதற்கெல்லாம் ஏன் அழுகுறீங்க? பெரிய விஷயம் நடக்குமா சின்ன விஷயங்களை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார். இந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television