விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது ஈஸ்வரியிடம், கோபி தனது இரண்டாவது மனைவி ராதிகா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை போட்டு உடைக்கிறார். இதனால் கோபத்துடன் வீட்டிற்கு வரும் ஈஸ்வரி இந்த குழந்தை உனக்கு வேண்டாம் என்று ராதிகாவிடம் கூற, ராதிகா கோபத்தில் ஈஸ்வரியை திட்டி அங்கிருந்து அனுப்பி விடுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது.

பாக்கியாவின் கணவரான கோபி ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறார். கோபி பாக்யா மகன்களுக்கு திருமணம் ஆகி அவர்களுக்கே குழந்தைகள் இருக்கும் நிலையில் கோபி இரண்டாவதாக மீண்டும் தந்தையாகி இருப்பது போல் கதைக்களம் நகர்வது பார்க்கும் பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. இது மட்டுமில்லாமல் பாக்யாவிற்கு பழனிச்சாமியுடன் காதல் ஏற்படுவது போன்ற ட்ராக்கும் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் கோபி தனது தாயார் ஈஸ்வரியிடம் ராதிகா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் செய்தியை கூறுகிறார். இதைக் கேட்கும் ஈஸ்வரியை ராதிகாவிடம் சென்று இந்த குழந்தை உனக்கு வேண்டாம் என்று கூற, அதற்கு கோபத்தில் ஈஸ்வரியை ராதிகா திட்டி அனுப்பி விடுகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television