விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் வழக்கம் போல ஈஸ்வரி மற்றும் ராதிகாவின் தாயார் கமலாவுக்கும் இடையே சண்டை எழுகிறது. இதற்கு நடுவில் கோபி என்ன செய்வது என்று தெரியாமல் திரு திருவென முழித்துக் கொண்டிருக்கிறார். இதனால் மீண்டும் மீண்டும் வீட்டில் பிரச்சனை வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாக்கியா உடன் ஏற்பட்ட சண்டையால் கோபி ராதிகாவுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறார். அவருடன் கோபியின் தாயார் ஈஸ்வரியும் வீட்டிலிருந்து வெளியேறுகிறார் .ஆனால் வெளியேறியவர்கள் ராதிகாவின் தாயார் வீட்டுக்கு செல்கின்றனர். ஏற்கனவே கோபியின் தாயாருக்கும் ராதிகாவின் தாயாருக்கும் ஒத்துப்போகாது. இருவருக்கும் சண்டை இருக்கும் நிலையில், தற்போது ராதிகாவின் வயிற்றில் வளரும் குழந்தையை கலைக்க சொல்லி ஈஸ்வரி கூறியதால், ராதிகாவின் தாயார் கமலா ஈஸ்வரி மீது கடும் கோபத்தில் இருக்கிறார்.
இந்த நிலையில் வீட்டிற்கு வந்த ஈஸ்வரியை விரைவில் விரட்டி விட ராதிகாவும் அவரது தாயாரும் முடிவெடுத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அவர்களுக்குள் ஒவ்வொரு நாளும் சண்டை நடந்து கொண்டிருக்கிறது. அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television