விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஆஹா கல்யாணம்’ தொடரில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் குடித்துவிட்டு வீட்டில் கௌதம் ரகளை செய்து கொண்டிருக்கிறார். இதற்கிடையில் ஐஸ்வர்யா மயங்கி விழுகிறார். அப்போது அங்கு வரும் மருத்துவர் ஐஸ்வர்யாவை பரிசோதித்துப் பார்த்துவிட்டு அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறுகிறார். இதனால் வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு விரட்டுவதற்காக கௌதமமும் அவருடைய தாயார் சித்ராவும் பல சதித்திட்டங்களை தீட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஐஸ்வர்யா மாடலாக இருந்தபோது மதனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வீட்டில் உள்ள அனைவரிடமும் காட்டி கௌதம் பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார். தற்போது இந்த சண்டை முற்றிய நிலையில் சித்ரா ஐஸ்வர்யாவை வீட்டில் இருந்து வெளியேறுமாறு பிடித்து தள்ளுகிறார். கீழே விழுந்த ஐஸ்வர்யா மயக்கமடைகிறார். உடனே மருத்துவர் வந்து ஐஸ்வர்யாவை பரிசோதிக்கிறார்.

பின்னர் அவர் ஐஸ்வர்யா கர்ப்பமாக இருப்பதாக வீட்டில் உள்ள அனைவரிடமும் கூட அனைவரும் அதிர்ச்சியில் உறைகின்றனர். ஆனால் கௌதம் இந்த வயிற்றில் வளரும் குழந்தை என்னுடையது இல்லை என அதிர்ச்சி கொடுக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television