இனியாவை அழைத்து செல்ல ராதிகா வீட்டுக்கு வந்த செழியன்.! திருப்பி அனுப்பிய இனியா.!

வெளியிட்டது

பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் செழியனும் ராதிகா வீட்டிற்கு வந்துள்ளார். கோபி தனது முதல் மனைவியை பிரிந்து இரண்டாவது மனைவியுடன் எதிர் வீட்டிலேயே குடியிருந்து வருகிறார். வீட்டில் நடந்த ஒரு பிரச்சனையில் கோபியின் மகள் இனியா, ராதிகாவுடன் கோபியின் வீட்டில் வசித்து வருகிறார். இதனால் கடுப்பான பாக்கியாவின் குடும்பம் இனியாவை அங்கிருந்து எப்படியாவது கூட்டி வரவேண்டும் என்று முடிவெடுக்கிறது. இனியாவின் பாட்டி ஈஸ்வரி கோபமாக பேசுகிறார். இனியாவை திருப்பி வீட்டிற்கு அழைத்து வருமாறு ஒவ்வொருவரிடமும் கூறி வருகிறார். தான் சென்று அழைத்து வருவதாக ராமமூர்த்தி தாத்தா மூட்டை முடிச்சுடன் ராதிகாவின் வீட்டிற்கு கிளம்புகிறார்.

இனியாவை அழைத்து செல்ல ராதிகா வீட்டுக்கு வந்த செழியன்.! திருப்பி அனுப்பிய இனியா.! 1

ராமமூர்த்தி தாத்தாவின் வருகையை எதிர்பார்க்காத கோபியும் ராதிகாவும் அதிர்ச்சியில் உறைகின்றனர். என் பேத்தி இனியா இருக்கும் இடத்தில் தான் நானும் இருப்பேன் என்று சொல்லி தாத்தாவும் ராதிகாவின் வீட்டில் தங்க ஆரம்பித்து விட்டார். நேற்றைய எபிசோடு ராதிகாவின் சமையலை பார்த்து பல குறைகளை சொன்னார் ராமமூர்த்தி தாத்தா. சோறு விதையாக இருக்கிறது, சாம்பாரில் பருப்பு இல்லை என்று பல குறைகளை கூறினார். இதனால் ராதிகா கடுப்பாக இருக்கிறார். தற்போது கோபியின் மூத்த மகன் செழியனும் ராதிகாவின் வீட்டிற்கு வந்திருக்கிறார். அங்கு வந்த அவர், இனியாவை எப்படியாவது வீட்டிற்கு அழைத்துச் செல்ல திட்டமிடுகிறார்.

ஆனால் அங்கு செழியன் உடன் போகமாட்டேன் என்று இனியா அடம் பிடிக்கிறார். மேலும் கோபி இனியா இங்கு இருக்கட்டும். நீ வேண்டுமானால் ராமமூர்த்தி தாத்தாவை கூட்டிச் செல் என்று சொல்லுகிறார். ஆனால் தாத்தா நானும் போகமாட்டேன் என் பேத்தி இருக்கும் இடத்தில் தான் நானும் இருக்கேன் என்று அடம் பிடிக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! Watch the below video..!

 

Youtube Video Code Embed Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்