கடந்த 30 வருடங்களில் சின்னத்திரைக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு முதன்முறையாக இசையமைப்பாளர் வித்யாசாகர் வந்திருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தமிழ் மக்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்த ஒரு நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. ஜூனியர் மற்றும் சீனியர் என்று சுமார் 17 சீசன்களை முடித்திருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு தற்போது இசையமைப்பாளர் வித்யாசாகர் முதல் முறையாக வருகை தந்திருக்கிறார். பல பின்னணி பாடல்களை உருவாக்கிய பெருமைமிக்க இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பலரும் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருக்கின்றனர். குறிப்பாக பழம் பெரும் பாடகர்களான எஸ் பி பாலசுப்பிரமணியம் பி சுசீலா, எஸ் ஜானகி, வாணி ஜெயராம், எல் ஆர் ஈஸ்வரி போன்ற பல லெஜண்ட்கள் தொடங்கி தற்போது இருக்கும் பாடகர்ள் என அனைவரும் வருகை தந்திருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முதன்முறையாக இசையமைப்பாளர் வித்யாசாகரும் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கிறார். விசாகப்பட்டினத்தில் பிறந்து வளர்ந்த வித்தியாசாகர் 1990 ஆம் ஆண்டு தெலுங்கு படம் ஒன்றில் இசையமைத்ததன் மூலமாக தமிழ் திரையுலகிற்க்கு இசையமைத்தார். பின்னர் சீதா என்கிற ஒரு தமிழ் படத்தில் இசையமைத்த அவர், நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் தமிழ் திரையுலகுக்கு திரும்பினார். ஜெய்ஹிந்த், முறைமாமன், கோயம்புத்தூர் மாப்பிள்ளை, சுயம்வரம், பூவெல்லாம் உன் வாசம், தவசி, ரன், வில்லன், தூள், அன்பே சிவம், கில்லி, சந்திரமுகி போன்ற பல நல்ல படங்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார். மெலடி இசை உலகின் மன்னனாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார் வித்யாசாகர். இவர் கடைசியாக ஆருத்ரா, திருட்டுப் பயலே 2 ஆகிய இரண்டு படங்களுக்கு இசையமைத்தார். 2019 ஆம் ஆண்டிற்கு பின்னர் இவர் எந்த படத்திலும் இசையமைக்கவில்லை. தற்போது இவரது மகனும் ஒரு பாடகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்திருக்கிறார் வித்யாசாகர்.

அப்போது வித்யாசாகருக்கு எஸ்பிபி பேசிய பழைய வீடியோ ஒன்றை போட்டு காண்பித்தனர். அதில் நீங்கள் எனக்கு மாதம் ஒருமுறை கூட பாட்டு தர வேண்டாம் வருடத்திற்கு ஒருமுறை நல்ல பாட்டு கொடுத்தால் போதும் என்று வித்யாசாகர் குறித்து பெருமையாக எஸ்பிபி பேசி இருந்தார். அந்த வீடியோவை வித்தியாசாகருக்கு போட்டு காண்பித்தது சூப்பர் சிங்கர் டீம், அதை பார்த்த வித்யாசாகர் நெகிழ்ந்து போய் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்திருக்கிறார். ஒரு இசையமைப்பாளருக்கு பிஆர்ஓ போல செயல்பட்ட ஒரே ஒரு நல்ல மனிதர் எஸ்பிபி தான், அவரை நான் இழந்து விட்டேன் என்று சொல்லி கண் கலங்கினார். அதை பார்த்து அனுராதா, ஸ்ரீராம் உன்னி கிருஷ்ணன் என அனைவரும் கண்கலங்கினர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television