பாக்கியலட்சுமி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மகா சங்கமம் தற்போது நடைபெற்று வருகிறது. தற்போது இந்த சீரியலின் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. பாக்கியலட்சுமி தொடரில் கதாநாயகன் கோபிநாத் தனது மூத்த மனைவி பாக்கியலட்சுமியை விவாகரத்து செய்துவிட்டு தனது கல்லூரி கால தோழியான ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். ராதிகாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தை இருக்கிறது. கோபிக்கும் திருமணம் ஆகி அவரது மூத்த மகனுக்கும் திருமணம் ஆகி இருக்கிறது. இந்த நிலையில் கோபியின் இரண்டாவது திருமணத்தை தடுப்பதற்காக பாக்கியலட்சுமி, கோபியின் தந்தை, தாய், மகள் என அனைவரும் போராடி பார்த்து விட்டனர் ய. ஆனால் யார் பேச்சையும் கேட்காமல் ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

தற்போது கோபி ராதிகா கொடைக்கானலுக்கு ஒரு விருது வாங்கும் விழாவிற்கு சென்று உள்ளனர். அப்படியே ராதிகாவுடன் ஹனிமூனையும் முடித்து விடலாம் என்று எண்ணி கோபி திட்டமிட்டு அவரையும் கொடைக்கானலுக்கு அழைத்து செல்கிறார். ஆனால் எதிர்பாராத விதமாக கோபியின் தந்தை தாய் பாக்கியலட்சுமி மகன் என அனைவரும் கொடைக்கானலுக்கு டூரூக்கு வந்துள்ளனர். அங்கு மற்றொரு திருப்பமாக பாண்டியன் ஸ்டோர்ஸ்சும் வந்துள்ளனர். கோபியின் துரோகத்தை தெரிந்து கொண்டு மூர்த்தி, தனம் என அனைவரும் கோபியிடம் கோபப்படுகின்றனர். அவரிடம் வாக்குவாதத்திலும் எடுபடுகின்றனர். இதனால் கடுப்பான ராதிகா விவாகரத்து செய்துவிட்டு தானே அவர் என்னை திருமணம் செய்து கொண்டார் என்று பாக்யாவிடம் சண்டை போடுகிறார்.
கதை இப்படியாக நகர்ந்து கொண்டிருக்க தற்போது கோபி விருது வாங்கும் மேடைக்கு வருகிறார். அங்கு பாக்கியலட்சுமியும் இருக்கிறார். தற்போது கோபியின் மனைவியை மேடைக்கு வருமாறு அழைக்கின்றனர். அப்போது ராதிகா எழுந்து நிற்கிறார். அங்கு எதிர்பாராத ஒரு திருப்பம் நடைபெறுகிறது. அதை நீங்கள் கீழே இருக்கும் வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.. Watch the below video..
Youtube Video Code Embed Credits: Vijay Television