விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடருக்கு ஏராளமான குடும்ப தலைவிகள் ரசிகைகளாக உள்ளனர். இதனால் இந்த நாடகம் தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது. நாளுக்கு நாள் தொடரின் சுவாரசியம் அதிகரித்து வரும் வண்ணம் இருப்பதே இந்த தொடரின் சிறப்பு அம்சமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

தற்போது தொடரின் புதிய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ப்ரோமோவில், ராதிகா ஈஸ்வரி மீது பொய் பழி போட்டு போலீசில் தூக்கி வைக்கிறார். கோர்ட்டு வரைக்கும் வந்த ஈஸ்வரி வழக்கில் இறுதியாக அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில் ராதிகா பொய் சொல்வதை அறிந்த மயூ அதனை பாக்கியாவிடம் கூறவே, பாக்கியா மயூவை கோர்ட்டுக்கு அழைத்து வந்து சாட்சி சொல்ல வைக்கிறார்.
இதனால் வழக்கு உடைந்து ஈஸ்வரி வெளியே வருகிறார். தற்போது பாக்கியாவை பார்த்த ராதிகா தனது மகளை எப்படி கோர்ட்டுக்கு அழைத்து வரலாம் என கேள்வி கேட்கிறார். மேலும் பாக்கியாவை பார்த்துக்கொள்வதாகவும் மிரட்டி செல்கிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.
Embed Video Credits : VIJAY TELEVISION