விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி.இந்த தொடரினை இயக்குனர் டேவிட் இயக்க, சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.மேலும் இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா,திவ்யா கணேஷ் ,வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த நாடகத்திற்கு பெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இல்லத்தரசிகள் இந்த நாடகத்தினை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

தற்போது பாக்கியா கடைமீது வீண் பழி சுமத்தி கோபி கடையை மூட வைத்து உள்ளார். இதனால் பாக்கியா கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளார். உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பாக்கியா கடைக்கு சீல் வைத்து உள்ளனர். இதனால் பாக்கியா செய்வதறியாது உள்ளார்.தற்போது தொடரின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், பாக்கியாவிடம் ஆர்டருக்கு காசு கொடுத்தவர்கள் திரும்ப கேட்டு போராட்டம் செய்கின்றனர்.

இதனால் பாக்கியா மீது அனைவரும் கோபத்தில் உள்ளனர். மேலும் பாக்கியா கடை முன்பு அனைவரும் உடனே காசு வேண்டும் என போராடுகின்றனர். மேலும் கடையையும் உடைக்க செல்கின்றனர். இதனால் அவர்களின் பணத்தை உடனடியாக திரும்ப தருவதாக கூறி உள்ளனர்.
Embed Video Credits : VIJAY TELEVISION