விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. நாளுக்கு நாள் தொடரின் விறுவிறுப்பு அதிகரித்து வருவதால் ரசிகர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. பாக்கியாவுக்கு உறுதுணையாக இருந்து வந்த ராமமூர்த்தி தற்போது உயிரிழந்து உள்ளார். அவரின் இறுதி சடங்குகளை செய்ய வந்த கோபியை ஈஸ்வரி அனுமதிக்கவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ராமமூர்த்தியின் இறுதி சடங்குகளை பாக்கியா செய்ய வேண்டும் என ஈஸ்வரி கூறவே, அவரே அதனை செய்கிறார். அப்பாவுக்கு இறுதி சடங்கு செய்ய முடியாமல் கோபி தவித்து வருகிறார். தற்போது தொடரின் புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், கோபி தனது அப்பாவின் உடலை பார்த்து கதறி அழுகிறார். மேலும் தன்னை மன்னித்துக்கொள்ளுமாறும் கேட்கிறார்.
இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கண் கலங்கி கதறி அழுத கோபியை பார்த்த அனைவரும் சோகமாகி உள்ளனர். இந்த ப்ரோமோ வீடியோவை பார்த்த ரசிகர்கள் கோபிக்கு தங்களது ஆறுதல்களை கூறி வருகின்றனர்.
Embed Video Credits : VIJAY TELEVISION