“Miss U Akka”!! வெளியேறிய ரோஷினி!! மனமுடைந்த போன KPY பாலா பதிவிட்டுள்ள உருக்கமான பதிவு!!

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி “குக் வித் கோமாளி”. விஜய் டிவியின் மிக முக்கிய நிகழ்ச்சியாக இது பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு புதிய டஸ்க்கை கொடுத்து அதில் சொதப்புவர்களை அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றி வருகிறார்கள். உண்மையில் சமையல் போட்டியான இதில், பலரும் இதில் வரும் காமெடி காட்சிக்காகவே பார்த்து வருகிறாரகள்.

"Miss U Akka"!! வெளியேறிய ரோஷினி!! மனமுடைந்த போன KPY பாலா பதிவிட்டுள்ள உருக்கமான பதிவு!! 1

இந்த நிகழ்ச்சியில், அம்மு அபிராமி, தர்ஷன், கிரேஸ் கருணாஸ், ஸ்ருதிகா, அந்தோணி தாசன், மனோபாலா, ரோஷினி, சந்தோஷ், விடியுலேகா, ராகுல் தாத்தா, சுட்டி அரவிந்த் மற்றும் வைல்ட் கார்டு நுழைப்பாக முத்து ஆகியோர் பங்கெடுத்து உள்ளார். இதில், மனோபாலா, ராகுல் தாத்தா, சுட்டி அரவிந்த், அந்தோணி தாசன் ஆகியோர் முறையே வெளியேற்றப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மிகவும் ரசிகர்களால் ரசிக்கப்பட்ட குக் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். விஜய் டிவியில் ஒளிபரப்பான “பாரதி கண்ணம்மா” தொடரின் மூலம் சின்னத்திரையில் நாயகியாக அறிமுகமானவர் ரோஷினி. கொஞ்ச மாநிறமாக இருக்கும் இவர், இந்த தொடரின் கதையோட்டமும் நிறத்தை வைத்தே ஆரம்பத்தில் ஆரம்பிக்க பட்டதால், ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டார்.

கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமடைந்த இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நம்ப ரோஷினியே. ரசிகர்களுக்கு இவருடைய நிறம் கண்ணுக்கு தெரியவில்லை. இவருடைய நடிப்பும், charming’உம் மிகவும் கவர விரைவில் மிகவும் பிரபலமான நாயகியாக அந்த தொலைக்காட்சியில் மட்டுமின்றி வெளிப்புறங்களில் உருவெடுத்தார்.

கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் மிக பெரிய வரவேற்பை பெற்ற இந்த தொடரும், நாயகி ரோஷிணியும் திடீரென இக்கட்டான நிலையில் மமாட்டி தவித்தனர். நன்றாக சென்று கொண்டிருடந்த இந்த தொடர் சில நாட்களில் cringe தொடராக மாறியது. குறிப்பாக நாயகியின் நடையாத்திரை மிகவும் கேலி கிண்டலுக்கு உள்ளது.

இதன் காரணமாகவே நாயகி ரோஷினி இந்த தொடரிலிருந்து திடீரென விலக காரணம் என பலராலும் கூறப்பட்டது. இதில் இருந்து விலகிய அவரை விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக களமிறங்கியது. கோமாளிகளாக வருபவர்களுடன் நல்ல கெமிஸ்ட்ரி, நல்ல சமைக்கும் திறனும் கொண்டிருந்த இவர் இதிலும் மக்களை மிகவும் கவர்ந்தார்.

நேற்றைய வெளியேற்றமாக இவர் இந்த நிகழ்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இது ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சையாக அமைந்தது. இதனால் மனமுடைந்து போன கோமாளி பாலா தன்னுடைய இன்ஸ்டா பதிவில், ” உங்களை நான் மிஸ் செய்வேன்” என பதிவிட்டு இருந்தார். இந்த பதிவை ரோஷினியின் பகிர்ந்து,” நான் வைல்ட் கார்டு ரௌண்டில் மீண்டும் வருவேன்” என பதிவிட்டு நம்பிக்கை அளித்துள்ளார். இது இப்பொது சமூகவலைத்தளங்களில் மிகவும் வேகமாக பரவு வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்