“கோபியோட மனைவி நான் தான்”!!”விபத்தில் சிக்கும் கோபி”!!”மருத்துவமனைக்கு ஒரே நேரத்தில் வரும் பாக்கியாவும், ராதிகாவும்”

வெளியிட்டது

விஜய் டிவியின் தற்போதைய பரபரப்பான தொடர் “பாக்கியலட்சுமி”. பல்வேறு கோணங்களில் சென்ற இந்த தொடர் திடீரென கோபி ராதிகா என்று ஒரு தனி ட்ராக் உருவாக்கி அதுமுதல் மிக பெரிய வெற்றியையும், மக்களிடம் ஆதரவையும் பெற்று வருகிறது. மிகவும் பரபரப்பாக சென்றுகொள்ளும் இந்த தொடர் இப்பொது மற்றொரு பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது.  திருமணமான கோபி, மனைவி பாக்கியவிற்கு தெரியாமல் தன்னுடைய பழைய காதலியான ராதிகாவுடன் திருமணத்திற்கு ஆயுதம் ஆகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"கோபியோட மனைவி நான் தான்"!!"விபத்தில் சிக்கும் கோபி"!!"மருத்துவமனைக்கு ஒரே நேரத்தில் வரும் பாக்கியாவும், ராதிகாவும்" 1

கோபியின் உறவினர்கள் மூலம் உண்மையை அறியும் ராதிகா, பாக்கியாவிற்கு துரோகம் செய்யா முடியாமல் , ஊரை விட்டு போகும் முடிவை எடுக்கிறாள். இதனை பாக்கியவிடமும் கூற, சங்கடத்திற்கு உள்ளாகிறாள் பாக்கிய. அதே நேரம் ஊரை விட்டு போகும் ராதிகாவை சமாதான படுத்த நினைக்கும் கோபி அவள் வீட்டிற்கு சென்று கெஞ்ச, அவள் சம்மதிக்க மறுக்கிறாள். அப்போது அங்குவரும் ராதிகாவின் பழைய கணவர் ராஜேஷை கோபி தாக்கி விட்டு செல்கிறான்.

பொறுத்துக்கொள்ள முடியாமல் இருக்கும் ராதிகாவின் கணவர் ராஜேஷ், இந்த விஷயத்தை கோபியின் குடும்பத்தாரிடம் கூறிவிட வேண்டும் என்ற முடிவில் அவர்கள் வீட்டிற்கு சென்று “உங்க புள்ளைக்கு தான் குடும்பம் இருக்கே…எதுக்கு  என் பொண்டாட்டி வீட்டில் இருக்கான்,” என கூற இதனை கேட்டு அதிர்ச்சியாகும் கோபியின் தாயார் அவன் கூறுவதை நம்ப மறுக்கிறாள். கோபியின் மகன் எழில் ராஜேஷை வெளியே இழுத்துட்டு வந்து “அப்பாக்கு முன்னாடி பழக்கம் இருந்துச்சு..ஆனா இப்போ இல்ல, என கூற, ராஜேஷ் “இந்த இத பாரு” என கோபி ராதிகா காலில் விழுந்து அழுகும் விடியோவை காண்பிக்கிறான். அதிர்ச்சியில் உறைகிறான் எழில்.

இந்த சம்பவம் குறித்து எழிலிடம் கதறி அழுது கொண்டே முறையிட்டு கொண்டிருக்கிறாள். கொஞ்சம் கூட பொறுக்க முடையதா ராமமூர்த்தி கொந்தளித்து போய், “ஈஸ்வரி கொஞ்ச நேரம் நிறுத்து…உன் கவலை படுற அளவிற்கு உன் புள்ள யோகியும் இல்ல, அவன் இனொரு பொம்பள கூட தொடர்புல தான் இருக்கான்” என கூறிவிடுகிறார். இதனின் கேட்கும் ஈஸ்வரி நம்பமுடியாமல் அதிர்ச்சியில் உறைகிறாள்.

உண்மையை அறியும் ஈஸ்வரி கோபியை உடனே வெற்றிக்கு வரும் படி போனில் அழைக்கிறாள். கார் ஓட்டிக்கொண்டிருக்கும் கோபி அந்த அதிர்ச்சியில் வேகமாக சென்று மரத்தில மோதி, விபத்தில் சிக்குகிறான். இந்த செய்தியை மருத்துவமனையில் இருக்கும் இருவேறு செவிலியர்கள் பாக்கிய மற்றும் ராதிகா என இருவருக்குமே போன் செய்து கூப்பிட இருவருமே அதிர்ச்சியாகி பதறி அடித்துக்கொண்டு ஒரே நேரத்தில் மருத்துவமனை விரைகிறார்கள். அடுத்தடுத்து என்ன நடக்கவிருக்கிறது என தெரியவில்லை. இவ்வாறாக இந்த வாரம் நகர இருக்கிறது. அந்த விடியோவை நீங்களும் காண…

Video Courtesy- VijayTelevision

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்