பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவால் இந்த சீரியல் தற்போதைக்கு முடியாது என்கிற எண்ணத்திற்கு ரசிகர்கள் வந்துவிட்டனர். இதனால் மீண்டும் கமெண்டில் இயக்குனரை கமெண்டில் கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர். பாரதிகண்ணம்மா சீரியல் என்றைக்கோ முடிவுக்கு வர வேண்டிய ஒரு தொடர். 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான இந்த தொடர் தற்போது வரை இழுவையாக சென்று கொண்டிருக்கிறது. பலரும் இந்த தொடரை முடித்து விடுமாறு இயக்குனரிடம் கோரிக்கை வைத்து கமெண்ட்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் இயக்குனரோ இந்த கதையை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் முடிவில் இருக்கிறார் போலும். இந்தத் தொடரை பார்ப்பதை பலரும் நிறுத்திவிட்டனர். இருந்தாலும் இயக்குனர் பிரவீன் இதை முடிப்பதாக தெரியவில்லை. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

கண்ணம்மாவுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளும், தன்னுடைய குழந்தைகள் தான் என்று பாரதிக்கு தெரியவரும் நாள் அன்று நாடகம் முடிவுக்கு வரும். அதற்காக பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க பரிசோதனை செய்துள்ளார். ஆனால் பல சிக்கல்களால் அந்த முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாரதி டெல்லிக்கே சென்று தனது டிஎன்ஏ டெஸ்ட் முடிவுகளை வாங்கும் முடிவில் இருக்கிறார். இதற்காக அவர் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். அதற்கு முன்பாக தனது தாய் தந்தையிடம் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு அவர் செல்கிறார். இன்னொரு புறம் ஹேமா தனது தந்தையை தேடி நடைப்பயணமாக சென்று கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் வெண்பா ஹேமாவிடம் உன்னை பெத்த அப்பாவை, உன் தாய்க்கே தெரியாது நீ எங்கே போய் கண்டுபிடிக்க போகிறாய் என்று கிண்டலாக பேசுகிறார்.

இதனால் கடுப்பான ஹேமா, ஒரு கல்லை எடுத்து வெண்பாவின் தலையில் அடித்து அவரது தலையை உடைக்கிறார். இதனால் கோபமான வெண்பா ஹேமாவை ரவுடிகளை வைத்து கடத்துகிறார். ஹேமாவின் செருப்பு ரோட்டில் கிடப்பதை பார்க்கும் கண்ணம்மா ஹேமாவை யாரோ கடத்தி விட்டதாக கூறி கதறி அழுகிறார். இந்த ப்ரோமோவை பார்த்த பலரும் ஐயையோ இந்த நாடகம் இப்போதைக்கு முடியாது போல என்று கமெண்ட்களில் கழுவி ஊற்றத் தொடங்கி இருக்கின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! Watch the below video..!
YouTube Video Code Embed Credits: Vijay Television