பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியவர் தான் பிரதீப் அந்தோணி. இந்த நிகழ்ச்சியில் இவர் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்டு இருந்தார். இது இவரின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இவர் நிகழ்ச்சியில் டைட்டில் வெற்றிபெறுவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருந்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக இவர் வெற்றிவாய்ப்பை தவறவிட்டு உள்ளார். தற்போது பட வாய்ப்புக்காகவும் காத்து இருக்கிறார்.

கடந்த சீசனில், போட்டியாளர்களாக கலந்துகொண்ட மாயா , பூர்ணிமா , ஜோவிகா ஆகியோர், பிரதீப் ரங்கநாதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் கூறியதால் அவர் வீட்டை விட்டு வெளியேற்ற பட்டு இருந்தார். இதனால் இந்த நிகழ்ச்சி மீது மக்களுக்கு பெரும் அதிருப்தி ஏற்பட்டு இருந்தது. தற்போது பிரதீப் ஆண்டனி சினிமாவில் சாதிக்க போராடி வருகிறார். இயக்குனர் தான் தனது கனவு என்பதால் அதற்கான பாதையில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்து கொண்டு உள்ளார். இந்த திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அவருக்கு தங்களது திருமண வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.