Categories: Bigg Boss Tamil 6

ஆயிஷா வீட்டுல என்ன கட்டி வச்சி அடிச்சாங்க, மனமுடைந்து பேசிய ஆயிஷாவின் முன்னாள் காதலர்

வெளியிட்டது

பிக்பாஸில் கலந்து கொண்டுள்ள சத்யா சீரியல் நடிகை ஆயிஷா பற்றி அவரது முன்னாள் காதலர் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்து இருக்கிறார். கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர் ஆயிஷா. சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கேட்டரிங் படிப்பதற்காக வந்தார். அங்கு உதவி இயக்குனராக இருந்த தேவ் என்பவர் உடன் நெருக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் சேர்ந்து டிக் டாக் செய்து வந்தனர். பின்னர் தேவ்வின் முயற்சியால் விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள் சீரியல் நடிக்கும் வாய்ப்பு ஆயிஷாவிற்கு கிடைத்தது. அங்கு ஆயிஷாவுக்கு இயக்குனருடன் ஏற்பட்ட மோதலால், அந்த சீரியலில் இருந்து விலகி சன் டிவியில் ஒளிபரப்பான மாயா சீரியலில் நடித்தார். இந்த சீரியல் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆயிஷா வீட்டுல என்ன கட்டி வச்சி அடிச்சாங்க, மனமுடைந்து பேசிய ஆயிஷாவின் முன்னாள் காதலர் 1

அதன் பின்னர் அவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா சீரியலில் விஷ்ணுவுடன் இணைந்து நடித்தார். ஆரம்பம் முதலே விஷ்ணுவும் ஆயிஷாவும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இதை இருவரும் மறுக்கவும் இல்லை, ஒப்புக் கொள்ளவும் இல்லை. தற்போது சத்யா சீரியல் இரண்டாம் பாகம் முடிந்து ஆயிஷா பிக்பாஸுக்கு சென்று இருக்கிறார். அங்கு தன்னை ஒருவர் டிக் டாக் செய்து வரும்போது தவறாக பயன்படுத்தினார் என்று முன்னாள் காதலரை குத்திக்காட்டும் விதமாக பேசியிருந்தார். இதனால் கடுப்பான முன்னாள் காதலர் தற்போது தொலைக்காட்சிகளுக்கு பேட்டிகளை அளித்து வருகிறார். அப்போது ஆயிஷா பற்றி பல திடுக்கிடும் தகவல்களை அவர் கூறியிருக்கிறார்.

அதில் ஆயிஷாவுக்கு 16 வயதாக இருக்கும் போதே முதல் திருமணம் நடைபெற்றது. பின்னர் 18 வயதில் இரண்டாவது திருமணம் நடைபெற்றது. இரண்டாவது திருமணத்தை அவர் விவாகரத்து செய்யாமலேயே மூன்றாவதாக என்னுடன் காதலில் இருந்து வந்தார். பின்னர் நான்காவது ஆக சத்யா சீரியல் நடித்துக் கொண்டிருந்தபோது விஷ்ணுவுடன் லிவிங் டு கெதர் இருந்தார். பின்னர் அவருடனும் மனக்கசப்பு ஏற்பட்டு இப்போது ஐந்தாவதாக யோகேஷ் என்பவருடன் வாழ்ந்து வருவதாக ஆயிஷாவின் முன்னாள் காதலர் தேவ் பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆயிஷாவுக்கா கேரளா வரை சென்றதாகவும், ஆயிஷா வீட்டில் தன்னை கட்டி வைத்து அடித்ததாகவும் தேவ் பேசியிருக்கிறார். பின்னர் ஆயிஷா வீட்டை விட்டு சென்னைக்கு ஓடி வந்ததால் தான் நான் அவரை காதலிக்க தொடங்கினேன்.

 

ஆனால் முதலில் இரண்டு திருமணம் நடந்ததையே தன்னிடம் மறைத்து மூன்றாவதாக என்னை காதலித்து வந்தார். தற்போது ஐந்தாவதாக தன்னுடைய தங்கையின் காதலர் யோகேஷை மயக்கி அவருடன் குடும்பம் நடத்தி வருவதாகவும் ஆயிஷா பற்றிய உண்மைகளை தேவ் போட்டு உடைத்து இருக்கிறார். அவரின் முழுப்பேட்டியை நீங்களும் காண..! Watch the below video..!

YouTube Video Code Embed Credits: Indiaglitz Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்