என்ன முதல்ல நீ வெளிய பாத்து இருக்கியா? கமல் முன்பு தனலட்சுமியை திட்டிய விக்ரமன்.!

பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி சுமார் 57 நாட்களை கடந்து விட்டது. இந்த சீசன் எப்போதும் போல் இல்லாத அளவிற்கு நாளுக்கு நாள் விறுவிறுப்பை கூட்டி வருகிறது. 21 நபர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த போட்டியில் எட்டு நபர்கள் வெளியேறி விட 13 போட்டியாளர்களுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முன் எப்போதும் போல் இல்லாத அளவிற்கு இந்த சீசனை 24 மணி நேரமும் டிஸ்னு ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி வருவதால், மக்கள் நேரலையாக ஹவுஸ் மேட்ஸ் செய்யும் விஷயங்களை பார்த்து தெரிந்து கொள்ள முடிகிறது. இதனால் யார் தவறு செய்தார்கள்? யார் சரியாக பேசுகிறார்கள் என்பதை முன்கூட்டியே மக்கள் கணிக்க தொடங்கி இருக்கின்றனர். இந்த சீசன் ஆரம்பித்த நாள் முதலே சண்டை சச்சரவு என்று மிகவும் பரபரப்பாக இருந்து வருகிறது. பொதுமக்களில் இருந்து ஷிவின் மற்றும் தனலட்சுமி என்ற இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளே அனுப்பப்பட்டுள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

என்ன முதல்ல நீ வெளிய பாத்து இருக்கியா? கமல் முன்பு தனலட்சுமியை திட்டிய விக்ரமன்.! 1

விளம்பரம்

பிக்பாஸ் தொடங்கிய முதல் வாரம் எலிமினேஷன் இருக்காது. இரண்டாவது வாரத்தில் இருந்து எலிமினேஷன் செய்ய தொடங்குவர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜி.பி.முத்து தானாக வெளியேறி விட்டார். தொடர்ந்து சாந்தி மாஸ்டர், அசல் கோளாறு, ஷெரினா, வி.ஜே.மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி என மொத்தம் எட்டு போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் நடந்த பழங்குடியினர் மற்றும் ஏலியன் டாஸ்க்கில் வழக்கம் போல் அசீமுக்கும் மற்ற போட்டியாளர்களுக்கும் சண்டை வந்தது. இந்த சண்டை குறித்து வார இறுதி நாட்களில் கமல் எபிசோடில் வந்து அவர்கள் அனைவரையும் திட்டி தீர்த்து விட்டார். கடந்த வாரம் ஆறு பேர் மட்டும் நாமினேஷனில் இருந்தார்கள். அதில் குயின்சி, மைனா, ஜனனி ஆகிய மூவர் கடைசி இடத்தில் இருந்தனர். இதில் குயின்சி எலிமினேட் செய்யப்பட்டு வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.

தொடர்புடையவை  பாண்டியன் ஸ்டோர்ஸ்-ல் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் பிரபலம்.! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்.!

என்ன முதல்ல நீ வெளிய பாத்து இருக்கியா? கமல் முன்பு தனலட்சுமியை திட்டிய விக்ரமன்.! 3

விளம்பரம்

இந்த வாரம் நடந்த சூப்பர் ஸ்டார் வீக்லி டாஸ்க் சுற்று மிகவும் போர் அடித்ததாக மக்கள் கமெண்டில் கூறி வந்தனர். தங்கள் முகத்தை முழுமையாக காட்டாத கபடதாரி யார் என்று கமல் கேட்கிறார். அதற்க்கு தனலட்சுமி விக்ரமன் வெளியிலும் அப்படிதான் இருப்பார் என்று கூற விக்ரமன் கோபம் அடைகிறார். என்னை முதலில் நீங்கள் வெளியில் பார்த்து இருக்கீங்களா? நான் செய்யும் விவாதங்களையாவது பார்த்து இருக்கிறீர்களா என்று கோபமாக கேள்வி எழுப்புகிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் ஓரமாக சென்று இருவரும் சண்டை போடுங்கள் என்று கமெண்டில் கூறி வருகின்றனர். அந்த ப்ரோமோவை நீங்களும் காண.!Watch the below video..!

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment