“சமூகத்திற்கு ஒரு துரும்பை கூட அசைக்காதவர்”!! மோடிக்காக பேசி இப்படி ஒரு பதவி வந்திருக்கு” – பிஸ்மி

வெளியிட்டது

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் 12 பேர் நியமன உறுப்பினர்களாக இருக்கின்றனர். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மாநிலங்களவை நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டு வருகிறது.  இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, வீரேந்திர ஹெக்டே, பிரபல தெலுங்கு திரைப்பட கதையெழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் ஆகியோரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் எம்.பிக்களாக நியமித்துள்ளார். Video given below.

"சமூகத்திற்கு ஒரு துரும்பை கூட அசைக்காதவர்"!! மோடிக்காக பேசி இப்படி ஒரு பதவி வந்திருக்கு" - பிஸ்மி 1

1976 ஆம் ஆண்டு இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இசையமைப்பாளர் இளையராஜா. அன்று முதல் இன்று வரை 1000 படங்களுக்கு மேல் இசை அமைத்து, தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழிகளிலும் தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிபோட்டுள்ளார்.இசை உலகின் ஜாம்பவனாக இத்தனை ஆண்டுகள் கழித்தும் இன்றளவும் கொடிகட்டி வருபவர் இளையராஜா. இவர் இசையின் மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை கொள்ளை இருக்கிறார்.

கர்நாடக இசை மற்றும் மேலைநாட்டு இசையிலும் கைதேர்ந்தவர்கவே இளையராஜா இருக்கிறார். இவருக்கு பல விருதுகளும், பாராட்டுகளும் குவிந்துள்ளன. இந்திய அரசின் மிக முக்கிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் 2010ஆம் ஆண்டு வாங்கினர். மேலும் 5 தேசிய விருதுகளும், 2018ஆம் பத்ம விபூஷண் விருதையும் இவருக்கு அளித்து இந்திய அரசு கவுரவித்துள்ளது. பல விருதுகளும், ரசிகர்கள் மனதையும் கொள்ளை கொண்ட இவர் அண்மை காலமாக செய்து வரும் செயல்கள் ரசிகர்கள் பலருக்கும் பிடிக்காமல் உள்ளது.

ஒரு புத்தக வெளியிட்டு முன்னுரையை எழுதிய இளையராஜா அதில் அண்ணல் அம்பேத்கரையும், பிரதமர் மோடியையும் ஒப்பிட்டு எழுதியது மட்டுமின்றி ,  இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இளையராஜா மோடியும், அம்பேத்காரையும் ஒப்பிட்டு பேசி இருந்தார். அந்த அந்த இளையராஜாவின் பேச்சு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும் இந்த பேச்சிற்கு பலத்த கண்டனங்கள் எழுந்து இருந்தது. இதனை அவர் பெரிதாக எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை.

அப்போதிலிறுத்தே இளையராஜாவிற்கு ஜனாதிபதி பதவியும் அல்ல பாரத ரத்னா விருது போன்றவைகள் கொடுக்கப்பட போகின்றன என பல சர்ச்சை பேச்சுகளும் எழுந்தன. அவைகளுக்கு சாத்தியமில்லை என்றாலும் இப்பொது அவருக்கு நியமன ராஜ்ய சபா எம்.பி பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு திரை துறை சேர்ந்தவர்களும் வாழ்த்துக்கள் கூறி வந்த நிலையில், சில எதிர்ப்புகளும் கிளம்பின.

இது குறித்து பேசியுள்ள சினிமா விமர்சகர் மற்றும் வல்லுநர் பிஸ்மி, “மக்களின் கருத்துக்களை அவர் என்றுமே பெரிதாக கேட்டுக்கொண்டதில்லை, அவருக்கு பிடித்த விஷயங்களை அவர் செய்து கொண்டே தான் இருக்கிறார். அதே போல தான் இதுவும் அவருக்கு இது மரியாதை அல்ல அவமானம் என பேசியுள்ளார். அந்த வீடியோ இப்பொது வைரலாகி வருகிறது.

Video Courtesy – IBC tamizh.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்