சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், இவர் தன்னுடைய தமிழ் டக்கிஸ் என்ற யூடூப்பில் எப்போதும் படங்களை விமர்சித்தும், முக்கியமாக படத்திலுள்ள குறைகளை கண்ட அறிந்து அதை பற்றி மட்டுமே பேசி வருகிறார். ஒரு படம் வெளிவருகிறது என்றால், எப்போதும் ஒரு தரப்பு ரசிகர்கள் இவருடைய விமர்சனத்திற்காகவே காத்திருப்பர்.
அந்த அளவிற்கு இவர் தன்னுடைய விமர்சனங்கள் மூலம், பெரிய ரசிகர் பட்டாளங்களை சேர்த்து வைத்து உள்ளார். இதன் மூலம் கிடைத்த அறிமுகத்தை வைத்து இவர் ஒரு படத்தையும் இயக்கியுள்ளார். “ஆன்டி இந்தியன்” என்ற பெயரில் வெளியான இந்த படம் இவர் விமர்சிக்குமளவிற்கு கூட இல்லாமல் மிக மோசமாக போய் முடிந்தது.

இருப்பினும் ஒரு விமர்சனகராக இவர் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். குறைந்தப்பட்சம் ஒரு பஞ்சாவது தன்னுடைய ஸ்டைலில் கூறாமல் இவர் எந்த ஒரு வெளிவரும் படத்தையும் விமர்சனம் செய்தது இல்லை. சினிமா விமர்சனம் மட்டுமின்றி இவர் சினிமாவில் பணியாற்றுபவர்கள் ஏதேனும் தவறு செய்தல் இவர் முதல் ஆளாக அதனை கலாய்த்து விடுவார்.
பிரஷாந்த் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான “தமிழ்” என்ற படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் ஹரி. முதல் படமே நல்ல வெற்றி. அடுத்து தொடர்ந்து சேவல், ஆறு, வேல், சிங்கம் 1,2,3, சாமி 1 &2, தாமிரபரணி, ஐயா என பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். கடைசியாக இவர் இயக்கிய சாமி 2 மட்டும் சிங்கம் 3 படங்கள் தோல்வி அடைந்ததில் இவரை மிகவும் குறைக்கூறி வருகின்றனர். இந்நிலையில் தன்னுடைய மச்சான் அருண்விஜய், பிரியா பவானி ஷங்கர், யோகிபாபு முதலானோர் நடிப்பில் “யானை’ படத்தை இயக்கி முடித்துள்ளார்.
படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் ஹரி, பேசும் போது தெரியாமல் தவறுதலாக நடுவில் “…மாலா” என்ற வார்த்தையை கூறினார். அவர் எதிர்பாராமல் இந்த வார்த்தையை கூறினாலும் ஊடகத்தினருடன் பேசும் போது, கொஞ்சம் நிதானத்துடன் பேசியிருக்க வேண்டும்.
அதே போல இயக்குனர் மிஷ்கின். பிசாசு, அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போல பல நல்ல படங்களை கொடுத்தவர். ஐவரும் அண்மையில் ஒரு பிரஸ் மீட்டில் ” உங்களக்கு வேண்டும் என்றால் எருமை மாட்டை ரேப் செய்யும் ரோல் தருகிறேன்” என ஒருவருக்கு கூறி அங்கிருந்தவர்களை முகம் சுளிக்க வைத்தார்.
இந்த விஷயங்கள் இப்பொது பயங்கரமாக விமர்சிக்கப்பட்டு வகையில், இப்பொது நம்முடைய சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் அவர்களுக்கு தகுந்த பதிலை தன்னுடைய ட்விட்டர் பதிவில் எழுதியுள்ளார். அதில் 1000 கோடி காலெக்ஷன் செய்யும் படங்களை இயக்கும் ராஜமௌலியும், பிரஷாந்த் நீளும் பொறுமையாக நாகரிகமாகி பேசும் போது, உங்களுக்கு என்ன கேடு” என பதிவிட்டுள்ளார்.