Categories: அரசியல்

சி.ஏ.ஏ சட்டவிரோதமானது, மாநிலங்களுக்கு மறுக்க உரிமை உண்டு: கபில் சிபில்

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் குறித்து தனது நிலைப்பாடு மாறியிருப்பதாகவும், இச்சட்டம் அரசியலமைப்பிற்கு எதிரானது எனவும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபில் தெரிவித்துள்ளார்.

சி.ஏ.ஏ சட்டவிரோதமானது, மாநிலங்களுக்கு மறுக்க உரிமை உண்டு: கபில் சிபில் 1
கபில் சிபில்

முன்னதாக குடியுரிமை சட்டத்தை குறித்து கருத்து கூறிய கபில் சிபில், “ஒரு சட்டம் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்படும் போது, அதனை அமல்படுத்த மாட்டோம் என மாநில அரசாங்கத்தால் கூற முடியாது” என தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து புதிய கருத்து ஒன்றை கூறியுள்ள கபில் சிபில்,”எவ்வாறாயினும், ஒவ்வொரு மாநில சட்டமன்றதாலும் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கும் திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெறுவதற்கும் அரசியலமைப்பில் உரிமை உண்டு. ஆனால் குடியுரிமை திருத்த சட்டம் உச்சநீதிமன்றத்தால் அரசியலமைப்பு என்று அறிவிக்கப்பட்டால் அதை எதிர்ப்பது சிக்கலாக இருக்கும்” என கூறியுள்ளார்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்