இந்த சோஷியல் மீடியா காலத்தில் எது செய்தாலும் வைரலாகி விடுவது வழக்கமாகி இருக்கிறது. திடீரென நெட்டிசன்கள் யாருடைய வீடியோவையாவது எடுத்து வைரல் ஆக்கிவிட்டு அந்த நபரை பாப்புலர் ஆக்கி விடுகின்றனர். அந்த வகையில் பாப்புலரான ஒரு சிறுவன் தான் கையில் ரப்பரை மாட்டிக் கொண்டு மேஜிக் காட்டிய ஒரு சிறுவன். ஆறு வயது மதிக்கத்தக்க அந்த சிறுவன் தனது கையில் ரப்பரை மாட்டிக் கொண்டு, இங்கு பாருங்கள் இந்த ரப்பரை கையில் மாட்டிக் கொண்டு இன்னொரு கையில் வருகிறது என்று ஹே எப்படிடா? என்று கேள்வி எழுப்புவார். அந்த வீடியோ மிக வைரலானது. அதை தொடர்ந்து அந்த சிறுவனை பலரும் பேட்டிகள் எடுக்கத் தொடங்கினர். இந்த நிலையில் கயல் சீரியல் நடிகை சைத்ராவும் அதேபோல் ஒரு ரீல்ஸ் செய்து தனது instagram பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் நடிகை சைத்ரா ரெட்டி. இவர் ஆரம்பத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். இதனால் அவருக்கு பல ரசிகர்கள் கிடைத்தார்கள். தொடர்ந்து அவர் சன் டிவியில் கயல் சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ஆலியா மானசாவின் கணவர் சஞ்சீவ் நடித்து வருகிறார். இந்த தொடரில் தனி ஒரு பெண்ணாக இருந்து குடும்பத்தை காப்பாற்றும் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் சைத்ரா நடித்து வருகிறார். இந்த தொடரின் மூலம் அவருக்கு பல ரசிகைகள் கிடைத்திருக்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் தொடர்ந்து வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பல்லாயிரக்கணக்கான லைக்ஸை குவிப்பது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது அவர் கையில் ரப்பரை மாட்டிக் கொண்டு பேசும் வைரல் சிறுவன் போன்றே ரீல்ஸ் செய்து தனது instagram பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்த வீடியோவை அவரது ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..! Watch the below video..!
YouTube Video Code Embed Credits: Vijay Television