Categories: சினிமா

நடந்து முடிந்த எழில் கயல் திருமணம்..! முடிவுக்கு வருகிறதா கயல் சீரியல்..!

வெளியிட்டது

சின்னத்திரையை கதாநாயகியாக கலக்கி வருபவர் தான் சைத்ரா ரெட்டி. இவரை தெரியாத குடும்ப தலைவிகளே இருக்க முடியாது அந்தளவிற்கு சின்னத்திரையில் நாயகியாக பெயர் எடுத்து இருக்கிறார் சைத்ரா ரெட்டி. சின்னத்திரையில் கயல் சீரியல் மூலம் கதாநாயகியாக நடித்து இன்று பல ரசிகர்களை கொண்டு முன்னணி நடிகையாக கலக்கி வருகிறார். யாரடி நீ மோகினி என்ற தொடரின் மூலம் வில்லியாக சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகினார். பின்னர் அந்த கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்து கலக்கி இருந்தார்.

நடந்து முடிந்த எழில் கயல் திருமணம்..! முடிவுக்கு வருகிறதா கயல் சீரியல்..! 1

தற்போது கயல் சீரியலில் நாயகியாக நடித்து வரும் இவருக்கு ரசிகர்கள் ஆதரவு பெருகி இருக்கிறது. தற்போது இவர் நடித்து வரும் சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் தற்போது தொடரில் கயல் மற்றும் எழிலுக்கு திருமணம் ஆகியது போல ஒளிபரப்ப பட்டு இருக்கிறது.

இதுகுறித்து கூறிய சைத்ரா ரெட்டி, எங்கு சென்றாலும் தொடர் முடிவுக்கு வருகிறதா என கேட்டு வருவதாகவும்,ஆனால் தொடர் தற்போது முடியவில்லை இன்னும் இருக்கிறது என கூறி உள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

 

வெளியிட்டது

புதிய செய்திகள்