Categories: சினிமா

வீடு வாடகைக்கு கூட பணம் இல்லாம இருக்கேன்.! கதறி அழுத கூல் சுரேஷ்

வெளியிட்டது

நான் விமர்சனம் செய்வது பிடிக்கவில்லை என்றால் கூறி விடுங்கள். நான் இனிமேல் தியேட்டருக்கு வரமாட்டேன், விமர்சனம் செய்ய மாட்டேன் என்று கூல் சுரேஷ் கதறி அழும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். சில நாட்களாக கூல் சுரேஷுக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகமாக வருகிறது. இதனால் மனமுடைந்து போன கூல் சுரேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டு கதறி அழுதிருக்கிறார். திரைப்படங்கள் வெளியாகும் பொழுது அந்த படத்தில் நடித்தவர்கள் வந்து பார்க்கிறார்களோ இல்லையோ,்கூல் சுரேஷ் முதல் ஆளாக வந்து பார்த்துவிட்டு படம் குறித்து விமர்சனங்களை கூறுவார். பெரும்பாலும் இவர் பாசிட்டிவ் விமர்சனங்களை கூறுவதால் இவரின் வீடியோக்களை மக்கள் பெரிதும் விரும்பி பார்க்கத் தொடங்கினர். மேலும் காமெடியாக பல விஷயங்களை செய்வதால் இவர் குறுகிய காலகட்டத்திலேயே மிகப் பிரபலமானார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

வீடு வாடகைக்கு கூட பணம் இல்லாம இருக்கேன்.! கதறி அழுத கூல் சுரேஷ் 1

மேலும் இவர் வெந்து தணிந்தது காடு அந்த படத்துக்கு வணக்கத்தை போடு என்று ஒவ்வொரு படம் வெளியாகும் பொழுதும் மறக்காமல் கூறிவிடுவார். தற்போது அவர் எதிர்பார்த்து இருந்த வெந்து தணிந்தது காடு படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. படத்திற்கு வந்த கூல் சுரேஷ் கார் மீது ஏறி ரசிகர்கள் காலும் கண்ணாடியை உடைத்து விட்டனர். மேலும் கூல் சுரேஷுக்கு சில நெகட்டிவ் விமர்சனங்களும் வரத்தொடங்கி இருக்கின்றன. இதனால் மனமுடைந்த அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு கதறி அழுதுள்ளார். தனக்கு படங்களை விமர்சிப்பதால் எந்த விதமான வருமானமும் வராது. என் வீட்டு வாடகைக்கு கூட பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறேன் என்று கூறினார். மேலும் தனக்கு வரும் நெகடிவ் விமர்சனங்களால் மனமுடைந்து போயுள்ளதாகவும் கூறினார்.

 

 

பலரும் கார் கண்ணாடியை அடித்து உடைத்தது போல கூல் சுரேஷ் அடித்து உடைக்கவில்லையா என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறீர்கள். உங்களுக்கு நான் என்ன துரோகம் செய்தேன்? உங்களை எல்லாம் மகிழ்வித்து கொண்டு தானே இருக்கிறேன் என்று அவர் கண்ணீர் மல்க பேசினார். மேலும் தன்னால் வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை, வண்டிக்கு ட்யூ கட்ட முடியவில்லை. ஆனால் சோசியல் மீடியாக்களை திறந்தாலே நான்தான் இருக்கிறேன். எனக்கு எந்த விதமான வருமானமும் இல்லை என்று கண்ணீர் விட்டு அழுதார். மேலும் என் தலைவன் எஸ்டிஆருகாகத்தான் இவ்வளவும் செய்தேன். அந்த படமும் வெளிவந்துவிட்டது. இனிமேல் நான் விமர்சனங்கள் செய்வதற்காக தியேடருக்கு வரப்போவதில்லை என்றும் கூறினார். அவரையும் முழு வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

 

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்