தமிழ் திரையுலகம் மிகவும் எதிர்பார்த்து காத்துகொண்டிருந்த படமான “விக்ரம்” படம் இன்று மிக பெரிய ரசிகர்கள் கொண்டாட்டத்தில் வெளியாகி உள்ளது. உலகநாயகன் கமல் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். கமலின் சொந்த நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கூடுதல் வலுசேர்க்கும் விதமாக அனிருத் இசையமைத்துள்ளார்.

அண்மை காலங்களில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம், இன்று கிட்டத்தட்ட அணைத்து திரையரங்கில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக வெளியாகி இருக்கிறது. படத்தின் மீது மிக பெரிய எதிர்பார்ப்பை இது காட்டுகிறது. குறிப்பாக மக்கள் கமர்சியல் கமலஹாசனை பார்த்து நிறைய ஆண்டுகள் ஆகிவிட்டதால் மிக பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர். இன்று அதிகாலை 4 மணி காட்சிக்கு பல இடங்களில் திரையிடபட்டுள்ளது. சென்னை ரோகினி திரை அரங்கில் கமலும் மக்களையோட சேர்ந்து படத்தை பார்த்து கண்டு களித்துள்ளார்.
சிம்புவின் “மாநாடு” படம் வெளியான பொது அது அவர்க்கு மிக பெரிய கம்பேக் படமாக அமைந்தது. இந்த படத்திற்கு நடிகரும், சிம்புவின் நண்பருமான நடிகர் “கூல்” சுரேஷ் ஒரு கமெண்ட் செய்திருந்தார். “வெந்து தனித்தது காடு, மவனே சிம்புவிற்கு வணக்கத்தை போடு” என கூறி ரசிகர்களின் அகோபித்த வரவேற்பை பெற்றார்.
இதன் மூலம் அடுத்தடுத்த படங்களுக்கும் இவர் இதே பாணியில் அனைத்து படங்களுக்கும் ரிவியூ செய்ய தொடங்கினர். அது ரசிகர்களுக்கு நன்றாகவே பிடித்துப்போக ஒவ்வொரு முக்கிய படம் வெளிவரும் போதும் இவருடைய ரிவியூ பார்க்க காத்திருக்க தொடங்கியுள்ளனர்.
இன்று வெளியான விக்ரம் பத்தியும் அவர் தன்னுடைய ஸ்டைலில் ரிவியூ செய்துள்ளார். அதிகாலை 4 மணி கட்சிக்கு சென்றுள்ள இவர், படத்தை பார்த்து விட்டு, “வெந்து தனித்தது காடு, மவனே கமல் சார்க்கு வணக்கத்தை போடு” என ஆரம்பித்து, “இந்த படத்துல ஒரு கருப்பு கமல் நடிச்சிருக்காரு, இனிமேல் விஜய்சேதுபதி அவர்கள் கருப்பு கமல் என்று அழைக்கபடுவர்” என ரசிகர்களின் மிகுந்த கரகோசத்திற்கு மத்தியில் பேசினார். நீங்களும் காண வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Video Courtesy – BehindWoodsTv