“மரணபீதியில் கோமாளிகள்….இன்னும் நான் ஆரம்பிக்கவேலயே….அலறவிட்ட புது செஃப்”

வெளியிட்டது

சின்னத்திரைகளிலும் ஒளிபரப்பாகும் நிறைய நிகழ்ச்சிகள் ரசிகர்களிடேயே பெரும் வரவேற்பை பெற்று சிறப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. அதில் பெரும்பாலானவை விஜய் டீவியை சேர்ந்ததே. நீயா நானா, பிக் பாஸ், பிபி ஜோடிகள், சூப்பர் சிங்கர், சுஐப்ர் சிங்கர் ஜூனியர் என பல்வேறு நிகழ்ச்சிகளும் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ளது. இப்பொது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோதான் குக் வித் கோமாளி. இது தற்போது இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்து மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் பழைய கோமாளிகளான ஷிவாங்கி, மணிமேகலை, பாலா, சக்தி, சுனிதா ஆகியோரும், புதிய கோமாளிகளாக குரேஷி, பரத், அதிர்ச்சி அருண் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"மரணபீதியில் கோமாளிகள்....இன்னும் நான் ஆரம்பிக்கவேலயே....அலறவிட்ட புது செஃப்" 1

புதிய குக்குகளாக கிரேஸ் கருணாஸ், ரோஷினி, வித்யூலேகா, அம்மு அபிராமி, ஸ்ருதிகா மற்றும் தர்ஷன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். வெங்கடேஷ் பட் மற்றும் தாமு நடுவர்களாகவும், ரக்ஷன் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் தொடர்ந்து கொண்டு உள்ளார்கள்.சமையல் போட்டி என்றாலும் இதில் மிகவும் பேசப்படுவதும் ரசிக்கப்படுவதும் கோமாளிகளாக வந்து செய்யும் சேட்டைகளை தான் மக்கள் மிகவும் விரும்புகிறார்கள். இவர்கள் இணைந்து சமைக்கும் போது நடக்கும் ரகளைகள் உண்மையிலேயே சிரிப்பை வரவைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

உலகத்தில் உள்ள அனைத்து தமிழ் பேசும் மக்கள் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியை பார்க்காமல் இருக்க முடியாது. விஜய் டிவியின் பல மைல்கால் நிகழ்வுகளில் இந்த நிகழ்ச்சியை துவங்கியதும் இவர்களுடைய மிக முக்கிய வெற்றியே. குக் வித் கோமாளி ப்ரோமோவை பார்ப்பதற்கு பல ரசிகர்கள் உள்ளனர். ப்ரோமோ வெளியான சில மணி நேரங்களில் மில்லியன் பார்வையாளர்களை கடந்து விடுவது வழக்கம்.

சென்ற வார நிகழ்ச்சியில் செஃப் வெங்கடேஷ் பட் கலந்து கொள்ளாமல், அவருக்கு பதிலாக மற்றொரு செஃப் பங்கெடுத்தார். ஆரம்பத்தில் அவரை பேச வைத்த செஃப் தாமு, “சொல்லுங்க சசி நீங்க எப்படி பீல் பண்றீங்க” கேட்க, புது செஃப் கூறிய முதல் பதிலே அனைவரையும் ஆப் செய்தது. “நான் எப்போதும் கோவமான முகங்களை தான் பார்த்துள்ளேன்…எல்லாருமே சந்தோஷமா சிரிச்சிட்டு இருக்கீங்க” என அவர் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாரிடமும் தங்களுடைய விஷயங்களை பற்றி கேட்டறிந்து கொண்டு பின்னர், “நான் பட் சார் மாதிரி இல்ல, அவருக்கு கோபம் வராது…எனக்கு சும்மா சும்மா வரும்” என சொல்ல கோமாளிகள் அனைவரது முகத்திலும் ஒருவித கலவரம் தெரிந்தது.

நல்ல படியாக சென்ற வார நிகழ்ச்சி முடிய, இறுதி போட்டியாளர்களாக ஸ்ருதிகா, அம்மு அபிராமி, வித்யூலேகா மற்றும் தர்ஷன் செல்ல முத்துக்குமார் தோல்வி அடைந்து வெளியேறினார். அந்த விடியோவை நீங்களும் காண….

Video Courtesy – Vijay Television.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்