சின்னத்திரைகளிலும் ஒளிபரப்பாகும் நிறைய நிகழ்ச்சிகள் ரசிகர்களிடேயே பெரும் வரவேற்பை பெற்று சிறப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. அதில் பெரும்பாலானவை விஜய் டீவியை சேர்ந்ததே. நீயா நானா, பிக் பாஸ், பிபி ஜோடிகள், சூப்பர் சிங்கர், சுஐப்ர் சிங்கர் ஜூனியர் என பல்வேறு நிகழ்ச்சிகளும் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ளது. இப்பொது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோதான் குக் வித் கோமாளி. இது தற்போது இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்து மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் பழைய கோமாளிகளான ஷிவாங்கி, மணிமேகலை, பாலா, சக்தி, சுனிதா ஆகியோரும், புதிய கோமாளிகளாக குரேஷி, பரத், அதிர்ச்சி அருண் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
புதிய குக்குகளாக கிரேஸ் கருணாஸ், ரோஷினி, வித்யூலேகா, அம்மு அபிராமி, ஸ்ருதிகா மற்றும் தர்ஷன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். வெங்கடேஷ் பட் மற்றும் தாமு நடுவர்களாகவும், ரக்ஷன் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் தொடர்ந்து கொண்டு உள்ளார்கள்.சமையல் போட்டி என்றாலும் இதில் மிகவும் பேசப்படுவதும் ரசிக்கப்படுவதும் கோமாளிகளாக வந்து செய்யும் சேட்டைகளை தான் மக்கள் மிகவும் விரும்புகிறார்கள். இவர்கள் இணைந்து சமைக்கும் போது நடக்கும் ரகளைகள் உண்மையிலேயே சிரிப்பை வரவைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இறுதி சுற்றிற்கு முன்பாக அந்த சுற்றிற்கு தகுதி பெற வேண்டி நடத்தப்படும் Wild Card சுற்றில் நடைபெற்ற போட்டியில் முன்னர் வெளியேறிய போட்டியாளர்கள் பங்கெடுத்தனர். மனோபாலா மற்றும் அந்தோணி தாசன் சில காரணங்களால் இந்த போட்டியில் பங்கெடுக்கவில்லை. இதில் இறுதி போட்டிக்கு பங்கெடுத்த ஸ்ருதிகா, விதியுலேகா, அம்மு அபிராமி மற்றும் தர்ஷன் சும்மா கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இந்த முறை நடைபெற்று முடிந்த இறுதி சுற்றை ஏற்கனவே சிவாங்கி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முடிந்துள்ள ஷூட்டிங்கை போஸ்ட் போட்டிருந்தார். அதன் வெற்றியாளர் யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. ஷூட்டிங் முடிந்தது முதலே இவர் தான் இம்முறை பட்டம் வென்றவர் என பல உத்தேசங்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.
சென்ற வாரம் நடைபெற்ற Wild Card சுற்றில் முறையே கிரேஸ் மற்றும் சந்தோஷ் பிரதாப் ஆகியோர் வென்று இறுதி போட்டிக்கு சென்றுள்ளனர். இப்பொது இறுதி சுற்றி வாய்ப்பில் ஸ்ருதிகா, அம்மு அபிராமி, விதியுலேகா, தர்ஷன், கிரேஸ் மற்றும் சந்தோஷ் பிரதாப் ஆகியோர் உள்ளனர். இப்பொது சமீபத்திய அறிவிப்பாக நடிகை ஸ்ருதிகா வென்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.