மகனுக்காக மீண்டும் இணைந்த தனுஷ் ஐஸ்வர்யா, வைரலாகும் புகைப்படம். என்ன சேதின்னு தெரியுமா?

விவாகரத்து அறிவிப்புக்கு பின்னர் முதல் முறையாக தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் சந்தித்து உள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பிரபல இயக்குனர் கஸ்தூரி ராஜா அவர்களின் இளைய மகன் நடிகர் தனுஷ். இவர் சிறு வயதிலேயே திரைப்படத்துறையில் தனது பயணத்தைத் தொடங்கி தற்போது வெற்றி நாயகனாக வலம் வருகிறார். ஆரம்பத்தில் பல அவமானங்களை சந்தித்த போதிலும் தற்போது பாலிவுட், ஹாலிவுட், கோலிவுட் என அனைத்து தளங்களிலும் முத்திரை பதித்து வருகிறார். இவர் கடந்த 18 வருடங்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகளான ஐஸ்வர்யா அவர்களை மணம் முடித்தார். தன்னைவிட வயதில் மூத்தவர் என்ற போதிலும் பல எதிர்ப்புகளுக்கும், சச்சரவுகளுக்கும் நடுவில் அவர் ஐஸ்வர்யாவை கரம் பிடித்தார். 18 வருடங்கள் கடந்து விட்டப் பிறகு தானும் ஐஸ்வர்யாவும் பிரிந்து விட்டதாகவும், மனைவியாகவும், நல்ல தோழியாகவும் இருந்த ஐஸ்வர்யாவுக்கு நன்றி எனவும், தாங்கள் இருவரும் இனி தனித்தனியாக தங்கள் பணத்தை தொடர உள்ளதாகவும், தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் தெரிவித்து இருந்தார்.

தொடர்புடையவை  Vijay Antony டோப்பாவை பாத்த உடனே தியேட்டரே குபீர்னு சிரிச்சிடுச்சு.! பங்கம் செய்த ப்ளூ சட்டை மாறன்.!

மகனுக்காக மீண்டும் இணைந்த தனுஷ் ஐஸ்வர்யா, வைரலாகும் புகைப்படம். என்ன சேதின்னு தெரியுமா? 1

விளம்பரம்

இது தனுஷ் ரசிகர்களிடையேவும், குறிப்பாக அவரது மாமனாரான சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியுள்ளது. 18 வருடம் ஒன்றாக வாழ்ந்த பிறகு இரண்டு பிள்ளைகள் பிறந்த பிறகு இவ்வாறு மணவாழ்க்கையை முறித்துக் கொள்வது ஏற்ப்புடையது இல்லை என்று ஒரு தரப்பினரும், இது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் என்று மற்றொரு தரப்பும் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் சமூக வலைத்தளத்தில் இந்த தகவல் வெளியான பின்பு இதுவரை தனுஷிடம் இருந்தோ, ரஜினியிடம் இருந்தோ அதிகாரப்பூர்வமாக எந்த செய்தியோ, பேட்டியோ வெளியாகவில்லை.

மகனுக்காக மீண்டும் இணைந்த தனுஷ் ஐஸ்வர்யா, வைரலாகும் புகைப்படம். என்ன சேதின்னு தெரியுமா? 3

விளம்பரம்

மகனுக்காக மீண்டும் இணைந்த தனுஷ் ஐஸ்வர்யா, வைரலாகும் புகைப்படம். என்ன சேதின்னு தெரியுமா? 5

இந்த அறிவிப்புக்கு பின்னர் அவர்கள் இருவரும் எந்த இடத்திலும் சந்தித்து கொள்ளவே இல்லை. 8 மாத காலமாக இருவரும் பேசாமல் இருந்து வந்தனர். தனது இரு மகன்களுடன் ஐஸ்வர்யா தந்தை ரஜினிகாந்த் வீட்டில் வசித்து வருகிறார். மகன்களை அழைத்துக்கொண்டு அவ்வப்போது தனுஷும் வெளிநாடு டூர் சென்று வருகிறார். இந்த நிலையில் 8 மாதங்களுக்கு பிறகு தனுஷ் ஐஸ்வர்யா ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இவர்களின் மூத்த மகன் யாத்ரா பள்ளியில் விளையாட்டு கேப்டன் ஆக பதவியேற்றுள்ளார். அதை காண தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் சென்றுள்ளனர். இருவரும் ஒன்றாக புகைப்படம் எடுத்து கொண்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த செய்தியை நீங்களும் காண..Watch the below Video…

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Entertainment Factory

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment