Categories: சினிமா

கருச்சிதைவுக்காக பெண்களை குறை சொல்ல வேண்டாம்!

கருச்சிதைவு என்பது இயல்பான ஒன்று தான், அதற்காக பெண்கள் மீது குற்ற உணர்வை சுமத்தாதீர் என கஜோல் கூறியுள்ளார்.

இந்தியில் முன்னணி நடிகையாக இருப்பவர் கஜோல். இவர் தமிழில் மின்சார கனவு படத்திலும்நடித்துள்ளார். இவர், நடிகர் அஜய்தேவ்கனை திருமணம் செய்துகொள்ள, இத்தம்பதியினருக்கு நைசா என்ற மகளும், யக் என்ற மகனும் உள்ளனர்.

கருச்சிதைவுக்காக பெண்களை குறை சொல்ல வேண்டாம்! 1
கஜோல் மற்றும் அவரது குடும்பத்தினர்.

இந்நிலையில் போட்டி ஒன்றினை அளித்த கஜோல் அதில், “அது 2001-ம் ஆண்டு. ‘கபி குஷி கபி கம்‘ பட காலகட்டம். அப்போதுதான் எனக்கு முதல் கருச்சிதைவு ஏற்பட்டது. படம் நன்றாக வந்திருந்தாலும் எனக்கு அது மகிழ்ச்சியான தருணமாக அமையவில்லை.

அடுத்து இன்னொரு முறையும் எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. முந்தைய அனுபவத்தைவிட இம்முறை அதிகம் சிரமப்பட்டேன். தாங்கமுடியாத வலி. ஆனாலும் மீண்டு வந்தேன்.

இப்போது என் கணவர் மற்றும் குழந்தைகளோடு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். கருச்சிதைவுக்கு ஆளானவர்களை, நம் நாட்டில் ஒதுக்கி வைக்கிறார்கள். அவர்களை தனிமைப்படுத்துகிறார்கள்.

குடும்பத்தினரே அசிங்கப்படுத்தி அவர்களை அவமானமாக உணர வைக்கிறார்கள். இது மிகவும் தவறு. கருச்சிதைவு பற்றி குடும்பத்தினர் உரையாட வேண்டும். கருச்சிதைவு என்பது எல்லோருக்கும் இயல்பாக நேர்கின்ற ஒன்றுதான்.

இதற்காக பெண்கள்மீது குற்றவுணர்வைச் சுமத்தாதீர்கள்’ என அவர் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்