ஐஸ்வர்யா வயிற்றில் வளரும் குழந்தைக்கு இவன் தான் அப்பா – ஷங்கரை கொண்டு வந்து நிறுத்திய ப்ரியா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஈரமான ரோஜாவே 2’ சீரியலின் தற்போது இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஐஸ்வர்யா கர்ப்பத்திற்கு காரணமானது ஷங்கர் தான் என்கிற உண்மையை ஜீவாவும் பிரியாவும் இணைந்து கண்டுபிடித்து வீட்டில் உள்ள அனைவரிடமும் போட்டு உடைத்து விடுகின்றனர். இதனால் ஐஸ்வர்யா அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார். மேலும் சங்கரையும் நேரில் அழைத்து வந்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்துள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா வயிற்றில் வளரும் குழந்தைக்கு இவன் தான் அப்பா - ஷங்கரை கொண்டு வந்து நிறுத்திய ப்ரியா 1
‘ஈரமான ரோஜாவே 2’ சீரியலில் கடைசி தம்பியாக இருக்கும் அர்ஜுனனுக்கு ஐஸ்வர்யா என்கிற பெண்ணை திருமணம் செய்து வைக்கின்றனர். ஆனால் ஐஸ்வர்யாவிற்கு ஏற்கனவே சங்கர் என்பவருடன் ஏற்பட்ட நெருக்கத்தால் ஐஸ்வர்யா வயிற்றில் குழந்தை உருவாகி இருக்கிறது. ஆனால் இந்த உண்மையை மறைத்து ஐஸ்வர்யா அர்ஜுனை திருமணம் செய்து கொள்கிறார். ஐஸ்வர்யாவை சங்கர் சில நாட்களாக பின் தொடர்ந்து வருவதை கவனித்த பிரியா ஜீவாவிடம் இது குறித்து கூறுகிறார். இருவரும் இணைந்து ஐஸ்வர்யாவின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஷங்கர் தான் காரணம் என்கிற உண்மையை கண்டுபிடித்து கூறுகின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  க்ரிஷ்ஷை தத்தெடுத்து வளர்க்க போறோம் என கூறிய முத்து மீனா..! மறுத்த விஜயா..! அதிர்ச்சியில் ரோகிணி...!

ஐஸ்வர்யா வயிற்றில் வளரும் குழந்தைக்கு இவன் தான் அப்பா - ஷங்கரை கொண்டு வந்து நிறுத்திய ப்ரியா 3
இந்த உண்மை வீட்டிலிருந்து வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்ததால் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போகின்றனர். குறிப்பாக ஐஸ்வர்யா பீதியில் உறைந்து போகிறார். அதே சமயம் அர்ஜூன் தனக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை நினைத்து அதிர்ச்சிக்குள்ளாகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment